6. பிறநாடுகள் | |
51.பெல்ஜியத்திற்கு வாழ்த்து | |
துணிவினால் வீழ்ந்து விட்டாய்! தொகையிலாப் படைக ளோடும் பிணிவளர் செருக்கி னோடும் பெரும்பகை எதிர்த்த போது பணிவது கருத மாட்டாய்; பதுங்குதல் பயனென் றெண்ணாய்; தணிவதை நினைக்க மாட்டாய் ‘நில்’லெனத் தடுத்தல் செய்தாய். | |
5 | |
ADVERTISEMENTS
| |
வெருளுத லறிவென் றெண்ணாய்; வித்தையோர் பொருட்டாக் கொள்ளாய்; சுருளலை வெள்ளம் போலத் தொகையிலாப் படைகள் கொண்டே மருளுறு பகைவர் வேந்தன் வலிமையாற் புகுந்த வேளை "உருளுக தலைகள், மானம் ஓங்குகெ"ன் றெதிர்த்து நின்றாய். | |
6 | |
யாருக்கே பகையென் றாலும் யார்மிசை இவன்சென் றாலும் ஊருக்குள் எல்லை தாண்டி உத்தர வெண்ணி டாமல், போருக்குக் கோலம் பூண்டு புகுந்தவன் செருக்குக் காட்டை வேருக்கும் இடமில் லாமல் வெட்டுவேன் என்று நின்றாய், | |
7 | |
ADVERTISEMENTS
| |
வேள்வியில் வீழ்வ தெல்லாம் வீரமும் புகழும் மிக்கு வீள்வதுண் டுலகிற் கென்றே வேதங்கள் விதிக்கும் என்பார்; ஆள்வினை செய்யும் போதில் அறத்திலே இளைத்து வீழ்ந்தார் கேள்வியுண் டுடனே மீளக் கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல். | |
8 | |
விளக்கொளி மழுங்கிப் போக வெயிலொளி தோன்று மட்டும், களக்கமா ரிருளின் மூழ்குங் கனகமா ளிகையு முண்டாம்; அளக்கருந் தீதுற் றாலும் அச்சமே யுளத்துக் கொள்ளார், துளக்கற ஓங்கி நிற்பர்; துயருண்டோ துணிவுள் ளோர்க்கே? | |
9 | |
ADVERTISEMENTS
| |
மாகாளி பராசக்தி உருசியாநாட் டினிற்கடைக்கண் வைத்தாள்,அங்கே ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி! கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்! வாகான தோள்புடைத்தார் வானமரர்; பேய்களெ லாம் வருந்திக் கண்ணீர் போகாமற் கண்புகைந்த மடிந்தனவாம்; வையகத்தீர்,புதுமை காணீர்! | |
1 |