தேசீய கீதங்கள்

5. தேசீயத் தலைவர்கள்

48. லாஜபதியின் பிரலாபம்
ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு.
12
ADVERTISEMENTS
வீமன் வளர்ந்த விறல்நாடு, வில்அசுவத்
தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம்
13
சீக்கிரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு.
14
ADVERTISEMENTS
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு
15
என்ன ருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ?
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ?
16
ADVERTISEMENTS
ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ?
ஏதெல்லாம் யான றியாது என்மனிதர் பட்டனரோ?
17