5. தேசீயத் தலைவர்கள் | |
48. லாஜபதியின் பிரலாபம் | |
ஆதிமறை தோன்றியநல் ஆரியநா டெந்நாளும் நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு | |
6 | |
ADVERTISEMENTS
| |
சிந்துவெனுந் தெய்வத் திருநதியும் மற்றதிற்சேர் ஐந்துமணி யாறும் அளிக்கும் புனல்நாடு. | |
7 | |
ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர்தம் வெம்புலனை வென்றஎண்ணில் வீரருக்குந் தாய்நாடு. | |
8 | |
ADVERTISEMENTS
| |
நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம் புல்லரைசெற் றாழ்த்த புனிதப் பெருநாடு. | |
9 | |
கல்நாணுந் திண்தோட் களவீரன் பார்த்தனொரு வில்நா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு | |
10 | |
ADVERTISEMENTS
| |
கன்ன னிருந்த கருணைநிலம், தர்மனெனும் மன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு | |
11 |