தேசீய கீதங்கள்

5. தேசீயத் தலைவர்கள்

48. லாஜபதியின் பிரலாபம்
ஆதிமறை தோன்றியநல் ஆரியநா டெந்நாளும்
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு
6
ADVERTISEMENTS
சிந்துவெனுந் தெய்வத் திருநதியும் மற்றதிற்சேர்
ஐந்துமணி யாறும் அளிக்கும் புனல்நாடு.
7
ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர்தம்
வெம்புலனை வென்றஎண்ணில் வீரருக்குந் தாய்நாடு.
8
ADVERTISEMENTS
நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம்
புல்லரைசெற் றாழ்த்த புனிதப் பெருநாடு.
9
கல்நாணுந் திண்தோட் களவீரன் பார்த்தனொரு
வில்நா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு
10
ADVERTISEMENTS
கன்ன னிருந்த கருணைநிலம், தர்மனெனும்
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு
11