5. தேசீயத் தலைவர்கள் | |
48. லாஜபதியின் பிரலாபம் | |
கண்ணிகள் | |
ADVERTISEMENTS
| |
நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே? | |
1 | |
வேதமுனி போன்றார் விருத்தரா மெந்தையிரு பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ? | |
2 | |
ADVERTISEMENTS
| |
ஆசைக் குமரன் அருச்சுனனைப் போல்வான்தன் மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ? | |
3 | |
அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே னும்பிரிந்தால் குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ? | |
4 | |
ADVERTISEMENTS
| |
வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே? | |
5 |