தேசீய கீதங்கள்

5. தேசீயத் தலைவர்கள்

48. லாஜபதியின் பிரலாபம்
கண்ணிகள்
ADVERTISEMENTS
நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து
வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே?
1
வேதமுனி போன்றார் விருத்தரா மெந்தையிரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ?
2
ADVERTISEMENTS
ஆசைக் குமரன் அருச்சுனனைப் போல்வான்தன்
மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?
3
அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே னும்பிரிந்தால்
குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ?
4
ADVERTISEMENTS
வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே?
5