தேசீய கீதங்கள்

5. தேசீயத் தலைவர்கள்

46.திலகர் முனிவர் கோன்

நெஞ்சகத்தோர் கணத்திலும் நீங்கிலான்
நீதமேயோர் உருவெனத் தோன்றினோன்;
வஞ்சகத்தைப் பகையெனக் கொண்டதை
மாய்க்குமாறு மனதிற் கொதிக்கின்றோன்;
துஞ்சுமட்டுமிப் பாரத நாட்டிற்கே
தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
அன்பொடோதும் பெயருடை யாரியன்
2
ADVERTISEMENTS

வீரமிக்க மராட்டியர் ஆரதம்
மேவிப் பாரத தேவி திருநுதல்
ஆர வைத்த திலக மெனக்திகழ்
ஐயன்நல்லிசைப் பாலகங் காதரன்
சேரலர்க்கு நினைக்கவுந் தீயென
நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீரடிக்க லத்தினை வாழ்த்துவேன்
சிந்தைதூய்மை பெறுகெனச் சிந்தித்தே.
3
பல்லவி
ADVERTISEMENTS
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
அதன்கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?
நின்னையவர் கனன்றுஇந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
யாங்களெலாம் மறக்கொ ணாதுஎம்
எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி
நீ வளர்தல் கென்செய் வாரே?
1

ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு
கடத்தியவற் கூறு செய்தல்
அருமையிலை,எளிதினவர் புரிந்திட்டா
ரென்றிடினும்,அந்த மேலோன்
பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென
நெஞ்சினுளே பெட்பிற் பேணி
வருமனிதர் எண்ண ற்றார் இவரையெலாம்
ஒட்டியெவர் வாழ்வ திங்கே?
2
ADVERTISEMENTS

பேரன்பு செய்தாரில் யாவரே
பெருந்துயரம் பிழைத்து நின்றார்?
ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய்
செய்ததினால் அவனுக் குற்ற
கோரங்கள் சொலத்தகுமோ? பாரதநாட்
டிற்பக்தி குலவி வாழும்
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
பலஅடைதல் வியத்தற் கொன்றோ?
3