5. தேசீயத் தலைவர்கள் | |
46.திலகர் முனிவர் கோன் | |
நெஞ்சகத்தோர் கணத்திலும் நீங்கிலான் நீதமேயோர் உருவெனத் தோன்றினோன்; வஞ்சகத்தைப் பகையெனக் கொண்டதை மாய்க்குமாறு மனதிற் கொதிக்கின்றோன்; துஞ்சுமட்டுமிப் பாரத நாட்டிற்கே தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும் அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல்போல் அன்பொடோதும் பெயருடை யாரியன் | |
2 | |
ADVERTISEMENTS
| |
வீரமிக்க மராட்டியர் ஆரதம் மேவிப் பாரத தேவி திருநுதல் ஆர வைத்த திலக மெனக்திகழ் ஐயன்நல்லிசைப் பாலகங் காதரன் சேரலர்க்கு நினைக்கவுந் தீயென நின்ற எங்கள் திலக முனிவர்கோன் சீரடிக்க லத்தினை வாழ்த்துவேன் சிந்தைதூய்மை பெறுகெனச் சிந்தித்தே. | |
3 | |
பல்லவி | |
ADVERTISEMENTS
| |
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன்கதிர்கள் விரைந்து வந்து கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ? நின்னையவர் கனன்றுஇந் நாட்டு மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் யாங்களெலாம் மறக்கொ ணாதுஎம் எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி நீ வளர்தல் கென்செய் வாரே? | |
1 | |
ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு கடத்தியவற் கூறு செய்தல் அருமையிலை,எளிதினவர் புரிந்திட்டா ரென்றிடினும்,அந்த மேலோன் பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென நெஞ்சினுளே பெட்பிற் பேணி வருமனிதர் எண்ண ற்றார் இவரையெலாம் ஒட்டியெவர் வாழ்வ திங்கே? | |
2 | |
ADVERTISEMENTS
| |
பேரன்பு செய்தாரில் யாவரே பெருந்துயரம் பிழைத்து நின்றார்? ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய் செய்ததினால் அவனுக் குற்ற கோரங்கள் சொலத்தகுமோ? பாரதநாட் டிற்பக்தி குலவி வாழும் வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம் பலஅடைதல் வியத்தற் கொன்றோ? | |
3 |