6. பிறநாடுகள் | |
50.மாஜினியின் சபதம் | |
தீயன புரிதல், முறைதவி ருடைமை, செம்மைதீர் அரசியல் அநீதி ஆயவற்றென்னெஞ் சியற்கையின் எய்தும் அரும்பகை யதன்மிசை யாணை தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய உரிமைகள் சிறிதெனு மில்லேன் தூயசீ ருடைத்தாம் சுதந்திரச் துவசம் துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன் | |
3 | |
ADVERTISEMENTS
| |
மற்றைநாட் டவர்முன் நின்றிடும் போழ்து மண்டுமென் வெட்கத்தி னாணை. முற்றியவீடு பெறற்கெனப் படைப்புற்று அச்செயல் முடித்திட வலிமை அற்றதா மறுகும் என்னுயிர்க் கதனில் ஆர்ந்தபே ராவலி னாணை, நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந் நலனறு மடிமையின் குணத்தால் | |
4 | |
வலியிழந் திருக்கும் என்னுயிர்க் கதன்கண் வளர்ந்திடும் ஆசைமீ தாணை. மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின்மீ தாணை. மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை. பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும் புன்சிறைக் களத்திடை யழிந்தும் | |
5 | |
ADVERTISEMENTS
| |
வேற்று நாடுகளில் அவர்துரத் துண்டும் மெய்குலைந் திறந்துமே படுதல் ஆற்றகி லாராய் எம்மரு நாட்டின் அன்னைமார் அழுங்கணீ ராணை. மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும் வகுக்கொணாத் துயர்களி னாணை. ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே யான்செயுஞ் சபதங்கள் இவையே; | |
6 | |
கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக் கட்டளை தன்னினும் அதனைத் திடனுற நிறுவ முயலுதல் மற்றித் தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம் உடனுறு கடமை யாகுமென் பதினும் ஊன்றிய நம்புதல் கொண்டும். தடநில மிசையோர் சாதியை இறைவன் சமைக்கெனப் பணிப்பனேல் அதுதான். | |
7 | |
ADVERTISEMENTS
| |
சமைதலுக் குரிய திறமையும் அதற்குத் தந்துள னென்பதை யறிந்தும், அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும் அன்னவர் தமக்கெனத் தாமே தமையல தெவர்கள் துணையு மில்லாத தம்அருந் திறமையைச் செலுத்தல் சுமையெனப் பொறுப்பின் செயத்தீனுக் கதுவே சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும் | |
8 |