தேசீய கீதங்கள்

6. பிறநாடுகள்

50.மாஜினியின் சபதம்

தீயன புரிதல், முறைதவி ருடைமை,
செம்மைதீர் அரசியல் அநீதி
ஆயவற்றென்னெஞ் சியற்கையின் எய்தும்
அரும்பகை யதன்மிசை யாணை
தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய
உரிமைகள் சிறிதெனு மில்லேன்
தூயசீ ருடைத்தாம் சுதந்திரச் துவசம்
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்
3
ADVERTISEMENTS

மற்றைநாட் டவர்முன் நின்றிடும் போழ்து
மண்டுமென் வெட்கத்தி னாணை.
முற்றியவீடு பெறற்கெனப் படைப்புற்று
அச்செயல் முடித்திட வலிமை
அற்றதா மறுகும் என்னுயிர்க் கதனில்
ஆர்ந்தபே ராவலி னாணை,
நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந்
நலனறு மடிமையின் குணத்தால்
4

வலியிழந் திருக்கும் என்னுயிர்க் கதன்கண்
வளர்ந்திடும் ஆசைமீ தாணை.
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
மாண்பதன் நினைவின்மீ தாணை.
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்
வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை.
பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்
புன்சிறைக் களத்திடை யழிந்தும்
5
ADVERTISEMENTS

வேற்று நாடுகளில் அவர்துரத் துண்டும்
மெய்குலைந் திறந்துமே படுதல்
ஆற்றகி லாராய் எம்மரு நாட்டின்
அன்னைமார் அழுங்கணீ ராணை.
மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்
வகுக்கொணாத் துயர்களி னாணை.
ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே
யான்செயுஞ் சபதங்கள் இவையே;
6

கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்
கட்டளை தன்னினும் அதனைத்
திடனுற நிறுவ முயலுதல் மற்றித்
தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம்
உடனுறு கடமை யாகுமென் பதினும்
ஊன்றிய நம்புதல் கொண்டும்.
தடநில மிசையோர் சாதியை இறைவன்
சமைக்கெனப் பணிப்பனேல் அதுதான்.
7
ADVERTISEMENTS

சமைதலுக் குரிய திறமையும் அதற்குத்
தந்துள னென்பதை யறிந்தும்,
அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்
அன்னவர் தமக்கெனத் தாமே
தமையல தெவர்கள் துணையு மில்லாத
தம்அருந் திறமையைச் செலுத்தல்
சுமையெனப் பொறுப்பின் செயத்தீனுக் கதுவே
சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும்
8