6. பிறநாடுகள் | |
50.மாஜினியின் சபதம் | |
ADVERTISEMENTS
| |
பேசி நின்ற பெரும்பிர திக்கினை மாசி லாது நிறைவுறும் வண்ணமே ஆசி கூறியருளுக! ஏழையேற்கு ஈசன் என்றும் இதயத் திலகியே. | |
15 | |
அறத்தினால் வீழ்ந்து விட்டாய்! அன்னியன் வலிய னாகி மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்வாய்: முறத்தினாற் புலியைத் தாக்கும் மொய்வரைக் குறப்பெண் போலத் திறத்தினால் எளியை யாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்! | |
1 | |
ADVERTISEMENTS
| |
வண்மையால் வீழ்ந்து விட்டாய்! வாரிபோற் பகைவன் சேனை திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலித லின்றி ஒண்மைசேர் புகழே மேலென்று உளத்திலே உறுதி கொண்டாய்; உண்மைதேர் கோல நாட்டார் உரிமையைக் காத்து நின்றாய்! | |
2 | |
மானத்தால் வீழ்ந்து விட்டாய்! மதிப்பிலாப் பகைவர் வேந்தன் வானத்தாற் பெருமை கொண்ட வலிமைதான் உடைய னேனும். ஊனத்தால் உள்ள மஞ்சி ஒதுங்கிட மனமொவ் வாமல் ஆனத்தைச் செய்வோ மென்றே அவன்வழி யெதிர்த்து நின்றாய்! | |
3 | |
ADVERTISEMENTS
| |
வீரத்தால் வீழ்ந்து விட்டாய்! மேல்வரை யுருளுங் காலை ஓரத்தே ஒதுங்கித் தன்னை ஒளித்திட மனமொவ் வாமல், பாரத்தை எளிதாக் கொண்டாய்; பாம்பினைப் புழுவே யென்றாய்; நேரத்தே பகைவன் றன்னை ‘நில்’லென முனைந்து நின்றாய் | |
4 |