6. பிறநாடுகள் | |
50.மாஜினியின் சபதம் | |
கருமமும் சொந்த நலத்தினைச் சிறிதும் கருதிடா தளித்தலுந் தானே தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு தளர்விலாச் சிந்தனை கொளலே பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற் பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும், அருமைசால் சபதம் இவைபுரி கின்றேன் ஆணைகளனைத்து முற்கொண்டே | |
9 | |
ADVERTISEMENTS
| |
என்னுட னொத்த தருமத்தை யேற்றார். இயைந்த இவ்‘வாலிபர் சபை‘க்கே தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம் தத்தமா வழங்கினேன், எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச் சுதந்திரம் பூண்டது வாகி இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக் குடியர சியன் றதா யிலக, | |
10 | |
இவருடன் யானும் இணங்கியே யென்றும் இதுவலாற் பிறதொழில் இலனாய்த் தவமுறு முயற்சி செய்திடக் கடவேன். சந்ததஞ் சொல்லினால்,எழுத்தால், அவமறு செய்கை யதனினால், இயலும் அளவெலாம் எம்மவ ரிந்த நவமுறு சபையி னொருபெருங் கருத்தை நன்கிதின் அறிந்திடப் புரிவேன். | |
11 | |
ADVERTISEMENTS
| |
உயரும் இந்நோக்கம் நிறைவுற‘இணக்கம்’ ஒன்றுதான் மாக்கமென் பதுவும், செயம்நிலை யாசச் செய்திடற் கறமே சிறந்ததோர் மார்க்க மென்பதுவும், பெயர்வற எங்கள் நாட்டினர் மனத்திற் பேணுமா றியற்றிடக் கடவேன்; அயலொரு சபையிலின்றுதோ றென்றும் அமைந்திடா திருந்திடக் கடவேன். | |
12 | |
எங்கள் நாட் டொருமை என்னொடுங் குறிக்கும் இச்சபைத் தலைவரா யிருப்போர் தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து தலைக்கொளற் கென்றுமே கடவேன்; இங்கெனது ஆவி மாய்ந்திடு மேனும் இவர்பணி வெளியிடா திருப்பேன்; துங்கமார் செயலாற் போதனை யாலும் இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன். | |
13 | |
ADVERTISEMENTS
| |
இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்; மெய்யிது,மெய்யிது,இவற்றை என்றுமே தவறி யிழைப்பனேல் என்னை ஈசனார் நாசமே புரிக; அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க; அசத்தியப் பாதகஞ் சூழ்க; நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து நித்தம்யா னுழலுக மன்னோ! | |
14 |