தேசீய கீதங்கள்

6. பிறநாடுகள்

50.மாஜினியின் சபதம்

கருமமும் சொந்த நலத்தினைச் சிறிதும்
கருதிடா தளித்தலுந் தானே
தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு
தளர்விலாச் சிந்தனை கொளலே
பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற்
பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும்,
அருமைசால் சபதம் இவைபுரி கின்றேன்
ஆணைகளனைத்து முற்கொண்டே
9
ADVERTISEMENTS

என்னுட னொத்த தருமத்தை யேற்றார்.
இயைந்த இவ்‘வாலிபர் சபை‘க்கே
தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்
தத்தமா வழங்கினேன், எங்கள்
பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்
சுதந்திரம் பூண்டது வாகி
இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக்
குடியர சியன் றதா யிலக,
10

இவருடன் யானும் இணங்கியே யென்றும்
இதுவலாற் பிறதொழில் இலனாய்த்
தவமுறு முயற்சி செய்திடக் கடவேன்.
சந்ததஞ் சொல்லினால்,எழுத்தால்,
அவமறு செய்கை யதனினால், இயலும்
அளவெலாம் எம்மவ ரிந்த
நவமுறு சபையி னொருபெருங் கருத்தை
நன்கிதின் அறிந்திடப் புரிவேன்.
11
ADVERTISEMENTS

உயரும் இந்நோக்கம் நிறைவுற‘இணக்கம்’
ஒன்றுதான் மாக்கமென் பதுவும்,
செயம்நிலை யாசச் செய்திடற் கறமே
சிறந்ததோர் மார்க்க மென்பதுவும்,
பெயர்வற எங்கள் நாட்டினர் மனத்திற்
பேணுமா றியற்றிடக் கடவேன்;
அயலொரு சபையிலின்றுதோ றென்றும்
அமைந்திடா திருந்திடக் கடவேன்.
12

எங்கள் நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்
இச்சபைத் தலைவரா யிருப்போர்
தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து
தலைக்கொளற் கென்றுமே கடவேன்;
இங்கெனது ஆவி மாய்ந்திடு மேனும்
இவர்பணி வெளியிடா திருப்பேன்;
துங்கமார் செயலாற் போதனை யாலும்
இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன்.
13
ADVERTISEMENTS

இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்;
மெய்யிது,மெய்யிது,இவற்றை
என்றுமே தவறி யிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக;
அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க;
அசத்தியப் பாதகஞ் சூழ்க;
நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம்யா னுழலுக மன்னோ!
14