4.தேசிய இயக்கப் பாடல்கள் | |
32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது | |
பிச்சைவாழ் வுகந்து பிறருடை யாட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன். புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன். மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும் | |
75 | |
ADVERTISEMENTS
| |
ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன். ஆரியத் தன்மை அற்றிடுஞ் கிறியர் யாரிவன் உளரவர் யாண்டேனும் ஒழிக! படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக் கடைபடு மாக்களென் கண்முன்நில் லாதீர்! | |
80 | |
சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க! நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான் வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக! தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் | |
85 | |
ADVERTISEMENTS
| |
பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க! நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க! ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும் வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன் | |
90 | |
ஆரியர் இருமின்!ஆண்கள் இங்கு இருமின்! வீரியம் மிருந்த மேன்மையோர் இருமின்! மானமே தெரிதென மதிப்பவர் இருமின்! ஈனமே பொறாத இயல்பினர் இருமின்! தாய்நாட்டன்புறு தனையர்இங்கு இருமின்! | |
95 | |
ADVERTISEMENTS
| |
மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்! புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்! கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்! ஊரவர் துயரில் நெஞ் சுருகுவீர் இருமின்! சோரநெஞ் சில்லாத் தூயவர் இருமின்! | |
100 |