4.தேசிய இயக்கப் பாடல்கள் | |
32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது | |
செற்றிடும் திறனுடைத் தீரரத் தினங்காள்! யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய! தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக! மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா ஆற்றலகொண் டிருந்நததிவ் வரும்புகழ் நாடு! | |
15 | |
ADVERTISEMENTS
| |
வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி? வீரரும் அவரிசை விரித்திடு புலவரும் பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு! தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும் | |
20 | |
நிர்மல முனிவரும் நிறைந்தநன் னாடு! வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடி யென் றுரைத்திடு நாடு! பாரத பூமி பழம்பெரும் பூமி; நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்! | |
25 | |
ADVERTISEMENTS
| |
பாரத நாடு பார்க்கெலாம் திலகம் நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்! வானக முட்டும் இமயமால் வரையும் ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும் காத்திடும் நாடு! கங்கையும் சிந்துவும் | |
30 | |
தூத்திரை யமுயையும் சுனைகளும் புனல்களும் இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு! மைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க பைந்நிற முகில்கள் வழங்குபொன் னாடு! | |
35 | |
ADVERTISEMENTS
| |
தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு! ஊனமொன் றறியா ஞானமெய்ப் பூமி வானவர் விழையும் மாட்சியர் தேயம்! பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? | |
40 |