4.தேசிய இயக்கப் பாடல்கள் | |
32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது | |
நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்! தாய்த் திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர், பேய்த்தகை கொண்டோர்,பெருமையும் வண்மையும், ஞானமும் அறியா நவைபுரி பகைவர், வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் | |
45 | |
ADVERTISEMENTS
| |
இந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்! ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும் மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! | |
50 | |
சாத்திரக் தொகுதியைத் தாழ்த்துவைக் கின்றார் கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்! எண்ணில துணைவர்காள்!எமக்கிவர் செயுந்துயர்; கண்ணியம் மறுத்தனர்;ஆண்மையுங் கடிந்தனர்; பொருளினைச் சிதைத்தனர்;மருளினை விதைத்தனர்; | |
55 | |
ADVERTISEMENTS
| |
திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்; பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்; சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்; வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்துநம் ஆரியம் புலையருக் கடிமைக ளாயினர் | |
60 | |
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை? வெற்றிகொள் புலையர்தாள் வீழ்நதுகொல் வாழ்வீர்? மொக்குள்தான் தோன்றி முடிவது போல மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்! தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை | |
65 | |
ADVERTISEMENTS
| |
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்? மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்? தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ? | |
70 |