4.தேசிய இயக்கப் பாடல்கள் | |
32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது | |
ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே; நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம். வேள்வியில் இதுபோல் வேள்வியொன் றில்லை; | |
135 | |
ADVERTISEMENTS
| |
தவத்தினில் இதுபேவால் தவம்பிறி தில்லை முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் காதலின் நண்பர் கலைதரு குரவரென்று | |
140 | |
இன்னவர் இருத்தல்கண்டுஇதயம்நொந் தோனாய்த் தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர் "ஐயனே!" இவர்மீ தம்பையோ தொடுப்பேன்! வையகத் தரசும் வானக ஆட்சியும் போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன் | |
145 | |
ADVERTISEMENTS
| |
மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்; கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது; வாயுலர் கின்றது;மனம் பதைக் கின்றது; ஓய்வுறுங் கால்கள்;உலைந்தது சிரமும்; வெற்றியை விரும்பேன்;மேன்மையை விரும்பேன்; | |
150 | |
சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்; எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்; சினையுறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?" எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன் னப்படை வில்லைக் களத்தினில் எறிந்து | |
155 | |
ADVERTISEMENTS
| |
சோர்வொடு வீழ்ந்தனன்; சுருதியின் முடிவாய்த் தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான் வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி, "புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால், அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச் | |
160 |