4.தேசிய இயக்கப் பாடல்கள் | |
32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது | |
செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய். உண்மையை அறியாய்;உறவையே கருதிப் பெண்மைகொண் டேதோ திற்றிநிற் கின்றாய் வஞ்சகர்,தீயர்,மனிதரை வருத்துவோர், நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்;இன்னோர் | |
165 | |
ADVERTISEMENTS
| |
தம்மொடு பிறந்த சகோதர ராயினும், வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம், ஆரிய நீதிநீ அறிந்திலை போலும்! பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைக்தும் | |
170 | |
பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை? பேடிமை யகற்று!நின் பெருமையை மறந்திடேல்! ஈடிலாப் புகழினாய்!எழுகவோ எழுக! என்றுமெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக் குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் | |
175 | |
ADVERTISEMENTS
| |
அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய் மறமே உருவுடை மாற்றலர் தம்மைச் சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன், விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் | |
180 | |
இசையுநற் றவத்தால் இன் றுவாழ்ந் திருக்கும் ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர், தேரில்,இந் நாட்டினர்,செறிவுடை உறவினர்; நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர் செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம் | |
185 | |
ADVERTISEMENTS
| |
பிறப்பினில் அன்னியர்,பேச்சினில் அன்னியர் சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார். |