4.தேசிய இயக்கப் பாடல்கள் | |
32. சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது | |
தேவிதாள் பணியுந் தீரர்இங்கு இருமின்! பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்! உடலினைப் போற்றா உத்தமர் இருமின்! கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்! வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்! | |
105 | |
ADVERTISEMENTS
| |
நம்மனோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும் புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்? மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின் இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும். பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் | |
110 | |
வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும் இராமனும் வேறுள இருந்திறல் வீரரும் நற்றுணை புரிவர்;வானக நாடுறும்; வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம். பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர் | |
115 | |
ADVERTISEMENTS
| |
செற்றினி மிலேச்சரைக் தீர்த்திட வம்மின்! ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும், ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின் | |
120 | |
உருளையி னிடையினும், மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்! நம் இதம்;பெருவளம் நலிந்திட விரும்பும் (வன்மியை)வேரறத் தொலைத்தபின் னன்றோ ஆணெனப் பெறுவோம்;அன்றிநாம் இறப்பினும் | |
125 | |
ADVERTISEMENTS
| |
வானுறு தேவர் மணியுல கடைவோம்! வாழ்வமேற் பாரத வான்புகழ் தேவியைத் தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்! போரெனில் இதுபோர்!புண்ணியத் திருப்போர்! பாரினில் இதுபோற் பார்த்திடற்கெளிதோ? | |
130 |