3.சுதந்திரம் | |
31. சுதந்திரப் பள்ளு பள்ளர் களியாட்டம் | |
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி நல்லோர் பெரிய ரென் னும் காலம் வந்ததே-கெட்ட நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே | |
(ஆடுவோமே) | |
ADVERTISEMENTS
| |
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம் | |
(ஆடுவோமே) | |
நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். | |
(ஆடுவோமே) | |
ADVERTISEMENTS
| |
ஜயஜய பவானி!ஜயஜய பாரதம்! ஜயஜய மாதா!ஜயஜய துர்க்கா! வந்தே மாதரம்!வந்தே மாதரம்! | |
சேனைத் தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்! யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! | |
5 | |
ADVERTISEMENTS
| |
அதிரத மன்னர்காள்! துரகத் ததிபர்காள்! எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்! வேலெறி படைகாள்!சூலெறி மறவர்காள்! கால னுருக்கொளும் கணைதுரந் திடுவீர், மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச் | |
10 |