3.சுதந்திரம் | |
29. சுதந்திர தேவியின் துதி | |
தேவி!நின் னொளிபெ றாத தேயமோர் தேய மாமோ? ஆவியங் குண்டோ? செம்மை அறிவுண்டோ?ஆக்க முண்டோ? காவிய நூல்கள் ஞானக் கலைகள் வேதங்க ளுண்டோ! பாவிய ரன்றோ நின்தன் பாலனம் படைத்தி லாதார்? | |
3 | |
ADVERTISEMENTS
| |
ஒழிவறு நோயிற் சாவார், ஊக்கமொன் றறிய மாட்டார்; கழிவறு மாக்க ளெல்லாம் இகழ்ந்திடக் கடையில் நிற்பார்; இழிவறு வாழ்க்கை தேரார், கனவினும் இன்பங் காணார்; அழிவறு பெருமை நல்கும் அன்னை!நின் அருள்பெ றாதார். | |
4 | |
வேறு | |
ADVERTISEMENTS
| |
தேவி!நின்னருள் தேடி யுளந்தவித்து ஆவி யும்தம தன்பும் அளிப்பவர் மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும் தாவில் வானுல கென்னத் தகுவதே | |
5 | |
அம்மை உன்தன் அருமை யறிகிலார் செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்; இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே. | |
6 | |
ADVERTISEMENTS
| |
மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால் போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர்; கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும்நின் பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர். | |
7 |