3.சுதந்திரம் | |
27.சுதந்திரப் பயிர் கண்ணிகள் | |
இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ? அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ? | |
9 | |
ADVERTISEMENTS
| |
வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? எந்தை சுயா தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? | |
10 | |
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய் வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? | |
11 | |
ADVERTISEMENTS
| |
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்? பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே | |
12 | |
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால் என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே? | |
13 | |
ADVERTISEMENTS
| |
இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? | |
14 |