3.சுதந்திரம் | |
27.சுதந்திரப் பயிர் கண்ணிகள் | |
நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால், ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே | |
15 | |
ADVERTISEMENTS
| |
ராகம்-கமாஸ் | |
தாளம்-ஆதி | |
என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னை கை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ? | |
1 | |
ADVERTISEMENTS
| |
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ? பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ? தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ அஞ்சலென் றருள்செயுங் கடமை யில்லாயோ? ஆரிய! நீயும் நின் அறம்மறந் தாயோ? வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே? வீர சிகாமணி!ஆரியர் கோனே! | |
2 | |
இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும், பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுத் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே. | |
1 | |
ADVERTISEMENTS
| |
நின்னருள் பெற்றி லாதார் நிகரிலாச் செல்வ ரேனும் பன்னருங் கல்வி கேள்வி, படைத்துயர்ந் திட்டா ரேனும், பின்னரும் எண்ணி லாத பெருமையிற் சிறந்தா ரேனும், அன்னவர் வாழ்க்கை பாழாம், அணிகள்வேய் பிணத்தோ டொப்பார். | |
2 |