3.சுதந்திரம் | |
26.சுதந்திரப் பெருமை "தில்லை எவளியிலே கலந்துவிட் டாலவர் திரும்பியும் வருவாரோ?"என்னும் வர்ணமெட்டு | |
மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர் ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்படு மாறுள தோ? | |
(வீர) | |
ADVERTISEMENTS
| |
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் மின்மினி கொள்வா ரோ? கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பா ரோ? | |
(வீர) | |
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ! | |
(வீர) | |
ADVERTISEMENTS
| |
வந்தே மாதரம் என்று வணங்கியபின் மாயத்தை வணங்குவ ரோ? வந்தே மாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ? | |
(வீர) | |
தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக் கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ? | |
1 | |
ADVERTISEMENTS
| |
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? | |
2 |