2.தமிழ் நாடு | |
24. தமிழச் சாதி | |
கலிதடை புரிவன், கலியின் வலியை வெல்லலாகாதென விளம்புகின் றனரால், நாசங் கூறும்‘நாட்டு வைத்தியர்’ இவராம், இங்கிவ் விருதலைக் கொள்ளியி னிடையே நம்மவர் எப்படி உய்வர்? | |
115 | |
ADVERTISEMENTS
| |
விதியே! விதியே!தமிழச் சாதியை என்செயக் கருதி யிருக்கின் றாயடா? விதி மேலேநீ கூறிய விநாசப் புலவரை நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீராயின் அச்சமொன்று இல்லை. ஆரிய நாட்டின் அறிவும் பெருமையும் | |
120 | |
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக! அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக! ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக! நந்தே யத்தினர் நாடொறும் உயர்க! வந்தே மாதரம்!வந்தே மாதரம்! | |
ADVERTISEMENTS
| |
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?-என்றும் ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ? | |
(வீர) | |
புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்எவறும் கொய்யென்று கண்டா ரேல்-அவர் இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு இச்சையுற் றிருப்பாரோ? | |
(வீர) | |
ADVERTISEMENTS
| |
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் பெற்றியை அறிந்தா ரேல்-மானம் துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பாரோ? | |
(வீர) |