2.தமிழ் நாடு | |
24. தமிழச் சாதி | |
முழுதுமே தழுவி மூழ்கிடி னல்லால், தமிழச் சாதி தரணிமீ திராது, பொய்ததழி வெய்தல் முடி பெனப் புகலும். நன்றடா!நன்று!நாமினி மேற்றிசை வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ. | |
85 | |
ADVERTISEMENTS
| |
‘ஏ எ!அஃதுமக் கிசையா’ தென்பர்; ‘உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்துநீர் தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந்தடை பல, அனைவ நீங்கும் பான்மைய வல்ல’ என்றருள் புரிவர். இதன்பொருள்’சீமை | |
90 | |
மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச் சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர் என்பதே யாகும்;இஃதொரு சார்பாம் பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு நமதுமூ தாதையர்(நாற்பதிற் றாண்டின் | |
95 | |
ADVERTISEMENTS
| |
முன்னிருந் தவரோ முந்நூற்றாண்டிற்கு அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம் ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ? பவுத்தரேநாடெலாம் பல்கிய காலத் தவரோ? புராண மாக்கிய காலமோ? | |
100 | |
சைவரோ? வைணவ சமயத் தாரோ? இந்திரன் தானே தனிமுதல்கடவுள் என்றுநம் முன்னோர் ஏத்திய வைதிகக் காலத் தவரோ? கருத்திலா தவர்தாம் எமதும தாதைய தென்பதிங் கெவர்கொல்?) | |
105 | |
ADVERTISEMENTS
| |
நமதுமூ தாதையர் நயமறக் காட்டிய ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே தழுடின் வாழ்னவ தமிழர்க் குண்டு; எனில், அது தழுவல் இயன்றிடா வண்ணம் | |
110 |