3.சுதந்திரம் | |
29. சுதந்திர தேவியின் துதி | |
அன்ன தம்மைகொள் நின்னை அடியனேன் என்ன கூறி இசைத்திட வல்லனே? பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின் சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். | |
8 | |
ADVERTISEMENTS
| |
பேர றத்தினைப் பேணுநல் வேலியே! சோர வாழ்க்கை, துயர், மிடி யாதிய கார றுக்கக் கதித்திடு சோதியே! வீர ருக்கமு தே!நினை வேண்டுவேன். | |
9 | |
விடுதலை! விடுதலை! | |
விடுதலை! | |
ADVERTISEMENTS
| |
பறைய ருக்கும் இங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை; பரவ ரோடு குறவருக்கும் மறவ ருக்கும் விடுலை; திறமை கொண்ட தீமை யற்ற தொழில்பு ரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை! | |
(விடுதலை) | |
ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனும் இல்லை ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்பது இந்தி யாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் எய்தி மனம கிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருதி கர்ச மான மாக வாழ்வமே! | |
(விடுதலை) | |
ADVERTISEMENTS
| |
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம்; வைய வாழ்வு தன்னில் எந்த வகையி னும்ந மக்குளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்க ளோடு பெண்களும் சரிநி கர்ச மான மாக வாழ்வம் இந்த நாட்டிலே! | |
(விடுதலை) |