60. கலைமகளை வேண்டுதல்நொண்டிச் சிந்து | |
எங்ஙனம் சென்றிருந்தீர்?-என தின்னுயிரே!என்தன் இசையமுதே! திங்களைக் கண்டவுடன்-கடல் திரையினைக் காற்றினைக் கேட்டவுடன் கங்குலைப் பார்த்தவுடன்-இங்கு காலையில் இரவியைத் தொழுதவுடன், பொங்குவீர் அமிழ்தெனவே-அந்தப் புதுமையி லேதுயர் மறந்திருப்பேன். மாதமொர் நான்காய்நீர்-அன்பு வறுமையி லேயெனை வீழ்த்திவீட்டீர்; பாதங்கள் போற்றுகின்றேன் என்தன் பாவமெலாங் கெட்டு ஞானகங்கை நாதமொ டெப்பொழுதும்-என்தன் நாவினி லேபொழிந் திடவேண்டும்; வேதங்க ளாக்கிடுவீர்-அந்த விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர். கண்மணி போன்றவரே!-இங்குக் காலையும் மாலையும் திருமகளாம் பெண்மணி யின்பத்தையும்;-சக்திப் பெருமகள் திருவடிப் பெருமையையும், வண்மையில் ஓதிடுவீர்!-என்தன் வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்; அண்மையில் இருந்திடுவீர்!இனி அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ! தானெனும் பேய்கெடவே,-பல சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே, வானெ னும் ஒளி பெறவே,-நல்ல வாய்மையி லேமதி நிலைத்திடவே. தேனெனப் பொழிந்திடுவீர்!-அந்தத் திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்! ஊனங்கள் போக்கிடுவீர்!-நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்! தீயினை நிறுத்திடுவீர்!-நல்ல தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்! மாயையில் அறிவிழந்தே-உம்மை மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம், தாயென உமைப்பணிந்தேன்-பொறை சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன். வாயினிற் சபத மிட்டேன்;இனி மறக்ககி லேன்.எனை மறக்ககிலீர்! | |
ADVERTISEMENTS
| |
ராகம்-ஆனந்த பைரவி தாளம்-சாப்பு வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்; கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்; உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்; கள்ள முற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசக்த் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்) மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்; கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்; கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்) வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்; வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர் வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர், மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர், வீர மன்னர்பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்) தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம், தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்; உய்வ மென்ற கருத்துடை யோர்கள் உயிரி னுக்குயி ராகிய தெய்வம்; செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம் கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம் (வெள்ளைத்) செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்! சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்! வந்த னம்இவட் கேசெய்வ தென்றால் வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்! மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை வரிசை யாக அடுக்கி அதன்மேல் சந்த னத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்) வீடு தோறும் கலையின் விளக்கம், வீதி தோறும் இரண்டொரு பள்ளி; நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி; தேடு கல்வியி லாததொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அனனை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர், (வெள்ளைத்) ஊணர் தேசம் யவனர்தந் தேசம் உதய ஞாயிற் றொளிபெறு நாடு; சேண கன் றதோர் சிற்றடிச் சீனம் செல்வப் பார சிகப்பழந் தேசம் தோண லத்த துருக்கம் மிசிரம் சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும் காணும் பற்பல நாட்டிடை யெல்லாம் கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க. (வெள்ளைத்) ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டை வந்தீர்! ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்! ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்! மான மற்று விலங்குக ளொப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ? போன தற்கு வருந்துதல் வேண்டா புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்) இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிரம் நாட்டல். பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்) நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்! நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்! அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்! ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்! மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம் வாணி பூசைக் குரியன பேசீர்! எதுவும் நல்கியிங் வ்வகை யானும் இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்) | |
மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்? ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே? ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே! வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே வாணி வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள் ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள் காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய் மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே. ஸ்ரீதேவி பொன்னரசி நாரணனார் தேவி,புகழரசி மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள். அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள்,ஸ்ரீதேவி தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. பார்வதி மலையிலே தான்பிறந்தாள்,சங்கரனை மாலையிட்டாள், உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள், நிலையில் உயர்ந்திடுவாள்,நேரே அவள்பாதம் தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே. | |
ADVERTISEMENTS
| |
ராகம்-சரஸ்வதி மனோஹரி தாளம்-திஸ்ர ஏகம்பிள்ளைப் பிராயத்திலே-அவள் பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு பள்ளிப் படிப்பினிலே-மதி பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட வெள்ளை மலரணமேல்-அவள் ணையுங் கையும் விரிந்த முகமலர் விள்ளும் பொருளமுதும்-கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத் தேன், அம்மா! ஆடி வருகையிலே-அவள் அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில் ஏடு தரித்திருப்பாள்-அதில் இங்கித மாகப் பதம் படிப்பாள், அதை நாடி யருகணைந்தால்-பல ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்:”இன்று கூடி மகிழ்வ” மென்றால்-விழிக் கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,அம்மா! ஆற்றங் கரைதனிலே-தனி யானதோர் மண்டப மீதினிலே,தென்றற் காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்கு கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்;அதை ஏற்று மனமகிழ்ந்தே-’ அடி என்னோ டிணங்கி மணம்புரி வாய்” என்று போற்றிய போதினிலே-இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள்,அம்மா! சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத் தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு பித்துப் பிடித்ததுபோல-பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவை யல்லால்-பிற வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு பத்திரண் டாமளவும்-வெள்ளைப் பண்மகள் காதலைப் பற்றிநின் றேன்,அம்மா! இரண்டாவது-லக்ஷ்மி காதல்ராகம்-ஸ்ரீராகம் தாளம்-திஸ்ர ஏகம்இந்த நிலையினிலே,அங்கொர் இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு சுந்தரி வந்துநின்றாள்-அவள் சோதி முகத்தின் அழகினைக் கண்டென்தன் சிந்தை திறைகொடுத்தேன்-அவள் செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும் அந்தத் தினமுதலா-நெஞ்சம் ஆரத் தழுவிட வேண்டுகின் றேன்,அம்மா! புன்னகை செய்திடுவாள்-அற்றைப் போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்;சற்றென் முன்னின்று பார்த்திடுவாள்-அந்த மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்;பின்னர் என்ன பிழைகள் கண்டோ-அவள் என்னைப் புறக்கணித் தேகிடு வாள்;அங்கு சின்னமும் பின்னமுமா-மனஞ் சிந்தி யுளமிக நைந்திடு வேன்,அம்மா! காட்டு வழிகளிலே-மலைக் காட்சியிலே,புனல் வீழ்ச்சி யிலே,பல நாட்டுப் புறங்களிலே-நகர் நண்ணு சிலசுடர் மாடத்தி லே,சில வேட்டுவர் சார்பினிலே-சில வீர ரிடத்திலும் வேந்த ரிடத்திலும், மீட்டு மவள்வருவாள்-கண்ட விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம்,அம்மா! மூன்றாவது-காளி காதல் ராகம்-புன்னகவராளி தாளம்-திஸ்ர ஏகம்பின்னோர் இராவினிலே-கரும் பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு; கன்னி வடிவமென்றே-களி கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில் அன்னை வடிவமடா!-இவள் ஆதி பராசக்தி தேவி யடா!-இவள் இன்னருள் வேண்டுமடா!-பின்னர் யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! செல்வங்கள் பொங்கிவரும்;-நல்ல தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்; அல்லும் பகலுமிங்கே இவை அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று விலலை யசைப்பவளை-இந்த வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத் தொல்லை தவிர்ப்பவளை-நித்தம் தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! | |
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்-பரா சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்கணபதி ராயன்-அவனிரு காலைப் பிடித் திடுவோம்; குண முயர்ந் திடவே-விடுதலை கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) சொல்லுக் கடங்காவே-பரா சக்தி சூரத் தனங்க ளெல்லாம்; வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி வாழியென்றேதுதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) வெற்றி வடிவேலன்-அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ!-பகையே! துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) தாமரைப் பூவினிலே-சுருதியைத் தனியிருந் துரைப்பாள் பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப் புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) பாம்புத் தலைமேலே-நடஞ் செயும் பாதத்தினைப் புகழ்வோம்; மாம்பழ வாயினிலே-குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு சிந்தனை செய்திடுவோம்; செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி திக்க னைத்தும் பரவும். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) | |
ADVERTISEMENTS
| |
சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து பக்தியினாற் பாடிப் பலகாலும்-முக்தி நிலை காண்போம் அதனாற் கவலைப் பிணிதீர்ந்து பூண்போம் அமரப் பொறி. பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம்-நெறிகொண்ட வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை ஐயமெலாந் திர்ந்த தறிவு. அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும், வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்!-குறிகண்டு செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும் வெல்வயிரச் சீர்மிகுந்த வேல். வேலைப் பணிந்தால் விடுதலையாம்;வேல் முருகன் காலைப் பணிந்தால் கவலைபோம்-மேலறிவு தன்னாலே தான்பெற்று சக்தி சக்தி சக்தியென்று சொன்னால் அதுவே சுகம். சுகத்தினைநான் வேண்டித் தொழுவேன் எப்போதும் அகத்தினிலே துன்பற் றழுதேன்-யுகத்தினிலோர் மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி அறுதலைத் தந்தாள் அவள். |