54. கண்ணம்மாவின் எழில் | |
ராகம்-செஞ்சுருட்டி தாளம்-ரூபகம் பல்லவிஎங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப் பூ; எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ! எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப் பூ; எங்கள் கண்ணம்மா நுதல் பால சூர்யன்.சரணங்கள் எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்; எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்; திங்களை மடிய பாம்பினைப் போலே செறிகுழல்,இவள் நாசி எட் பூ (எங்கள்) மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று; மதரு வாய் அமிர்தம்;இத ழமிர் தம்; சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய லரம்பை; சதுர் அயிராணி. (எங்கள்) இங்கித நாத நிலைய மிருசெவி சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்; மங்களக் கைகள் மஹர் சக்தி வாசம்; வயி ராலிலை,இடை அமிர்த வீடு. (எங்கள்) சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்; தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்; பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம் (எங்கள்) | |
ADVERTISEMENTS
| |
திருவே! நினைக்காதல்கொண் டேனே-நினது திரு வுருவே மறவாதிருந் தேனே-பல திசையில் தேடித் திரிந்நிளைத் தேனே-நினக்கு மனம் வாடித் தினங்களைதேனே-அடி,நினது பருவம் பொறுத்திருந் தேனே-மிகவும் நம்பிக் கருவம் படைத்திருந்தேனே-இடை நடுவில் பையச் சதிகள்செய் தாயே-அதனிலுமென் மையல் வளர்தல்கண் நல் காயே-நினதருளில் உய்யக் கருணைசெய் வாயே-பெருமைகொண்டு வையந் தழைக்கவைப் பேனே-அமரயுகஞ் செய்யத் துணிந்துநிற் பேனே-அடியெனது தேனே! என திரு கண்ணே!-எனையுகந்து தானே வருந் திருப்-பெண்ணே! | |
ராகம்-நாட்டை தாளம்-சதுஸ்ர ஏகம் மலரின் மேவு திருவே!-உன் மேல் யைல் பொங்கி நின்றேன்; நிலவு செய்யும் முகமும்-காண்பார் நினைவ ழிக்கும் விழியும், கலக லென்ற மொழியும்-தெய்வக் களிது லங்கு நகையும், இலகு செல்வ வடிவும்-கண்டுன் இன்பம் வேண்டு கின்றேன் கமல மேவு திருவே!-நின்மேல் காதலாகி நின்றேன். குமரி நின்னை இங்கே-பெற்றோர் கோடி யின்ப முற்றார்; அமரர் போல வாழ்வேன்,-என்மேல் அன்பு கொள்வை யாயின் இமமய வெற்பின் மோத,-நின்மேல் இசைகள் பாடி வாழ்வேன். வாணி தன்னை என்றும்-நினது வரிசை பாட வைப்பேன்! நாணி யேக லாமோ?-என்னை நன்க றிந்தி லாயோ? பேணி வைய மெல்லாம்-நன்மை பெருக வைக்கும் விரதம் பூணு மைந்த ரெல்லாம்-கண்ணன் பொறிக ளாவ ரன்றோ? பொன்னும் நல்ல மணியும்-சுடர்செய் பூண்க ளேந்தி வந்தாய்! மின்னு நின்தன் வடிவிற்-பணிகள் மேவி நிற்கும் அழகை என்னு ரைப்ப னேடீ!-திருவே! என்னு யிக்கொ ரமுதே! நின்னை மார்பு சேரத்-தழுவி நிக ரிலாது வாழ்வேன். செல்வ மெட்டு மெய்தி-நின்னாற் செம்மை யேறி வாழ்வேன்; இல்லை என்ற கொடுமை-உலகில் இல்லை யாக வைப்பேன்; முல்லை போன்ற முறுவல்-காட்டி மோக வாதை நீக்கி, எல்லை யற்ற சுவையே!-எனை நீ என்றும் வாழ வைப்பாய். | |
ADVERTISEMENTS
| |
ராகம்-சக்கரவாகம் தாளம்-திஸ்ரஏகம் நித்தமுனை வேண்டி மனம் நினைப்ப தெல்லாம் நீயாய்ப் பித்தனைப்போல் வாழ்வதிலே பெருமையுண்டோ? திருவே! சித்தவுறுதி கொண்டிருந்தார் செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே உத்தமநிலை சேர்வ ரென்றே உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம், சுத்த வெறும் பொய்யோடீ? சுடர் மணியே!திருவே! மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய்,திருவே! உன்னையன்றி இன்ப முண்டோ உலகமிசை வேறே! பொன்னை வடிவென் றுடையாய் புத்தமுதே,திருவே! மின்னொளி தருநன் மணிகள் மேடை யுயர்ந்த மாளிகைகள் வன்ன முடைய தாமரைப் பூ மணிக்குள முள்ள சோலைகளும், அன்ன நறு நெய் பாலும் அதிசயமாத் தருவாய்! நின்னருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன்,திருவே! ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் வீடுகளும் நெடுநிலமும் விரைவினிலே தருவாய்! ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ? எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ? வாடு நிலத்தைக் கண் டிரங்கா மழையினைப் போல் உள்ள முண்டோ நாடு மணிச் செல்வ மேல்லாம் நன்கருள்வாய், திருவே! பீடுடைய வான் பொருளே பெருங் களியே, திருவே! | |
மாதவன் சக்தியினைச்-செய்ய மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்; போதுமிவ் வறுமையெலாம்-எந்தப் போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே வேதனைப் படுமனமும்-உயர் வேதமும் வெறுப்புறச் சோர்மதியும் வாதனை பொறுக்கவில்லை-அன்னை மாமக ளடியிணை சரண் புகுவோம். கீழ்களின் அவமதிப்பும்-தொழில் கெட்டவ னிணக்கமும் கிணற்றினுள்ளே மூழ்கிய விளக்கினைப் போல்-செய்யும் முயற்சியெல் லாங்கெட்ட முடிவதுவும், ஏழ்கட லோடியுமோர்-பயன் எய்திட வழியின்றி இருப்பதுவும், வீழ்கஇக்கொடு நோய்தான்-வைய மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ? பாற்கட லிடைப் பிறந்தாள்-அது பயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்; ஏற்குமோர் தாமரைப்பூ-அதில் இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்; நாற்கரந் தானுடையாள்-அந்த நான்கினும் பலவகைத் திருவுடையாள்; வேற்கரு விழியுடையாள்-செய்ய மேனியள் பசுமையை விரும்பிடுவாள். நாரணன் மார்பினிலே-அன்பு நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்; தோரணப் பந்தரிலும்-பசுத் தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும், வீரர்தந் தோளினிலும்-உடல் வெயர்திட உழைப்பவர் தொழில்களிலம் பாரதி சிரத்தினிலும்-ஒளி பரவிட வீற்றிருந் தருள் புரிவாள். பொன்னிலும் மணிகளிலும் -நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும், கன்னியர் நகைப்பினிலும்-செழுங் காட்டிலும் பொழிலிலம் கழனியிலம், முன்னிய தணிவினிலும்-மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் பன்னிநற் புகழ்பாடி-அவள் பதமலர் வாழ்த்திநற் பதம்பெறு வோம். மண்ணினுட் கனிகளிலும்-மலை வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும், புண்ணிய வேள்வியிலும்-உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும் பண்ணுநற் பாவையிலும்-நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும், நண்ணிய தேவிதனை-எங்கள் நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம். வெற்றிகொள் படையினிலும்-பல விநயங்கள் அறிந்தவர் கடையினிலும் நற்றவ நடையினிலும்-நல் நாவலர் தேமொழித் தொடரினிலும், உற்றசெந் திருத்தாயை-நித்தம் உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்; கற்றபல் கலைகளெல்லாம்-அவள் கருணை நல் லொளிபெறக் கலிதவிர்ப்போம். | |
ADVERTISEMENTS
| |
ராகம்-கமாஸ் தாளம்-ஆதிபல்லவிதேகி முதம் தேகி ஸ்ரீ ராதே, ராதே!சரணங்கள்ராக ஸமுத்ரஜாம்ருதே ராதே, ராதே!; ராஜ்ஞீ மண்டல ரத்ந ராதே, ராதே! போக ரதி கோடி துல்யே ராதே, ராதே! (ஜய ஜய தேகி) பூதேவி தப; பல ராதே, ராதே! வேத மஹா மந்த்ர ரஸ ராதே, ராதே! வேத வித்யா விலாஸினி ஸ்ரீ ராதே, ராதே! ஆதி பரா சக்தி ரூப ராதே, ராதே! அத் யத்புத ச்ருங்காரமய ராதே, ராதே! (தேகி) தமிழ்க் கண்ணிகள் காதலெனுந் தீவினிலே, ராதே, ராதே!-அன்று கண்டெடுத்த பெண்மணியே! ராதே, ராதே! (தேகி) காதலெனுஞ் சோலையிலே ராதே, ராதே!-நின்ற கற்பகமாம் பூந் தருவே ராதே, ராதே! (தேகி) மாதரசே!செல்வப் பெண்ணே, ராதே, ராதே!-உயர் வானவர்க ளின்ப வாழ்வே ராதே, ராதே! (தேகி) |