48. கண்ணன் பிறப்பு | |
கண்ணன் பிறந்தான்-எங்கள் கண்ணன் பிறந்தான்-இந்தக் காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும். தின்ன முடையான்-மணி வண்ண முடையான்-உயர் தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன் பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற் புண்ணை யொரிப்பீர்-இந்தப் பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை எண்ணிடைக் கொள்வீர்-நன்கு கண்ணை விழிப்பீர்-இனி ஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு, (கண்ணன் பிறந்தான்) அக்கினி வந்தான்-அவன் திக்கை வளைத்தான்-புவி யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன் துக்கங் கெடுத்தான்-சுரர் ஒக்கலும் வந்தார்-சுடர்ச் சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள் மிக்க திரளாய்-சுரர் இக்கணந் தன்னில்-இங்கு மேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள் பொக்கென வீழ்ந்தார்,-உயிர் கக்கி முடிந்தார்-கடல் போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன் பிறந்தான்) சங்கரன் வந்தான்-இங்கு மங்கல மென்றான்-நல்ல சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன் பங்க மொன் றில்லை-ஒளி மங்குவ தில்லை-இந்தப் பாரின்கண் முன்பு வானத்திலே நின்று கங்கையும் வந்தாள்-கலை மங்கையும் வந்தாள்-இன்பக் காளி பராசக்தி அன்புட னெய்தினள் செங்கம லத்தாள்-எழில் பொங்கு முகத்தாள்-திருத் தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன் பிறந்தான்) | |
ADVERTISEMENTS
| |
கண்ணன் திருவடி, எண்ணுக மனமே திண்ணம் அழியா, வண்ணந் தருமே, தருமே நிதியும்,பெருமை புகழும் கருமா மேனிப்,பெருமா னிங்கே, இங்கே யமரர்,சங்கந் தோன்றும் மங்கும் தீமை,பொங்கும் நலமே. நலமே நாடிற்,புலவீர் பாடீர்; நிலமா மகளின்,தலைவன் புகழே. புகழ்வீர் கண்ணன்,தகைசே ரமரர் தொகையோ யசருப்,பகைதீர்ப் பதையே தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை ஆர்பபா ரமரர்,பார்ப்பார் தவமே. தவறா துணர்வீர்,புவியீர் மாலும் சிவனும் வானோர்,எவரும் ஒன்றே ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி என்றுந் திகழும், குன்றா வொளியே | |
ராகம்-ஹிந்துஸ்தான் தோடி தாளம்-ஏகதாளம் எங்கிருந்து வருகுவதோ?-ஒலி யாவர் செய்குவ தோ?-அடி தோழி! குன்றி னின்றும் வருகுவதோ?-மரக் கொம்பி னின்றும் வருகுவதோ?-வெளி மன்றி னின்று வருகுவதோ?-என்தன் மதி மருண்டிடச் செய்குதடி-இஃது, (எங்கிருந்து) அலையொ லித்திடும் தெய்வ-யமுனை யாறி னின்றும் ஒலுப்பதுவோ?-அன்றி இலையொ லிகும் பொழிலிடை நின்றும் எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து) காட்டி னின்றும் வருகுவதோ?-நிலாக் காற்றிக் கொண்டு தருகுவதோ?-வெளி நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ? நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து) பறவை யேதுமொன் றுள்ளதுவோ!-இங்ஙன் பாடுமோ அமுதக்கனற் பாட்டு? மறைவினிறுங் கின்னர ராதியர் வாத்தியதினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து) கண்ண னூதிடும் வேய்ங்குழல தானடீ! காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு, பண்ணன் றாமடி பாவையர் வாடப் பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து) | |
ADVERTISEMENTS
| |
காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;-அமு தூற்றினை யொத்த இதழ்களும்-நில வூறித் ததும்பும் விழிகளும்-பத்து மாற்றுப்பொன் னொத்தநின் மேனிம்-இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கொர் விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக் (காற்று வெளி)நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த நேரமும் நின்தன்ப் போற்றுவேன்-தயர் போயின போயின துன்பங்கள்-நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே-என்தன் வாயினி லேயமு தூறுதே-கண்ணம் மாவென் றபேர்சொல்லும் போழ்திலே-உயிர்த் தீயினி லேவளர் சோதியே!-என்தன் சிந்தனையே என்தன் சித்தமே!-இந்தக் (காற்று வெளி) | |
பல்லவிநின்னை யே ரதியென்று நினைக்கிறேனடி-கண்ணம்மா! தன்னையே சகியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)சரணங்கள் பொன்னை யே நிகர்த்த மேனி மின்னை ய, நிகர்த்த சாயற் பின்னை யே!-நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்னையே) மார னம்புக ளென்மீது வாரி வாரி வீச நீ-கண் பாரா யோ? வந்த சேரா யோ? கண்ணம்மா? (நின்னையே) யாவு மே சுக முனிக் கொர் ஈசனா னெக்குன் தோற்றம் மேவு மே-இங்கு யாவு மே,கண்ணம்மா! (நின்னையே) | |
ADVERTISEMENTS
| |
பல்லவி பீடத்தி லேறிக் கொண்டாள்-மனப் பீடத்தி லேறிக் கொண்டாள்.சரணங்கள் நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர் கேடற்ற தென்று கண்டு கூடக் கருது மொளி மாடத்தி லேறி ஞானக்ச கூடத்தில் விளையாடி ஓடத் திருந்து கன்னி வேடத்தி ரதியைப்போல், ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள் மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர் தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி) கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ? விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்காதனத்தே நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ? எண்ணத்துதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்! பெண்ணி லரசியிவள் பெரிய எரி லுடையாள் கண்ணுள் கணியெனக்குக் காத லிரதியிவள் பண்ணி லினிய சுவை பரந்த மொழியினாள் உண்ணு மிதழமுற ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி) |