35. காளிக்குச் சமர்ப்பணம் | |
இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத் தேழு வருடங்கள் காத்தனன்; வந்த னம்;அடி பேரருள் அன்னாய்! வைர வீ! திறற் சாமுண்டி! காளி! சிந்த னைதெளிந் தேனினி யுன்தன் திரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்; வந்தி ருந்து பலபய னாகும் வகைதெ ரிந்துகொள் வாழி யடி!நீ. | |
ADVERTISEMENTS
| |
எண்ணி லாத பொருட்குவை தானும், ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கே விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளிம் வெம்மை யும்பெருந் திணமையும் அறிவும், தண்ணி லாவின் அமைதியும் அருளும் தருவள் இன்றென தன்னை யென்காளி; மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன், வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன். தானம் வேள்வி தவங்கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெறச் செய்வேன், வானம் மூன்று மழைதரச் செய்வேன் மாறி லாத வளங்கள் கொடுப்பேன்; மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை வண்மை யாவும் வழங்கறச் செய்வேன், நான்வி ரும்பின காளி தருவாள். | |
எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி, வேண்டி னேனுக் கருளினள் காளி; தடுத்து நிற்பது தெய்வத மேனும் சாகு மானுட மாயினும் அஃதைப் படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி, பாரில் வெற்ற எனக்குறு மாறே. எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி, எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி, கண்ணு மாயிரு ரும்மென நின்றாள் காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்; மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கிநில் லாவோ? விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ? வெல்க காளி பதங்களென் பார்க்கே. | |
ADVERTISEMENTS
| |
உலகத்து நாயகியே!-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! உன் பாதம் சரண்பகுந்தோம்,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! கலகத் தரக்கர்பலர்,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! பய னொன்று மில்லையடி-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! மணி வெளுடக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! பிணிகளுக்கு மாற்றுண்டு,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! பேதைமைக்கு மாற்றில்லை,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! அணிகளுகொ ரெல்லையில்லாய்,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! அடைக்கலமிங் குனைப்புகுந்தோம்,-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! | |
தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய் பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்; கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய் எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி; ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன் சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி, பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும் ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்; யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொரிலாம் துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்; இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள் நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு; அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம். | |
ADVERTISEMENTS
| |
தாருக வனத்தினிலே-சிவன் சரணநன் மலரிடை யுளம்பதித்துச் சீருறத் தவம் புரிவார்-பர சிவன்பு கழமுதினை அருந்திடுவார்; பேருயர் முனிவர் முன்னே-கல்விப் பெருங்கடல் பருகிய சூதனென்பான் தேருமெய்ஞ் ஞனத்தினால்-உயர் சிவனிகர் முனிவரன் செப்புகின்றான். "வாழிய முனிவர்களே!-புகழ் வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே, உழியைச் சமைத்த பிரான்;-இந்த உலக மெலாமுருக் கொண்டபிரான், ஏழிரு புவன்ததிலும்-என்றும் இயல்பெரும் உயிகளுக் குயிராவான, ஆழுநல் லறிவாவான்,-ஒளி யறிவிக் கடந்தமெய்ப் பொருளாவான். தேவர்க் கெலாந்தேவன்;-உயர் சிவபெரு மான்பண்டொர் காலத்திலே காவலி னுலகளிக்கும்-அந்தக் கண்ணனுந் தானுமிங் கோருருவாய், ஆவசெல டருந்தவங்கள்-பல ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே மேவிநின் றருள்புரிந்தான்,-அந்த வியப்புறு சரிதையை விளம்புகின்றேன். கேளீர்,முனிவர்ளே!-இந்தக் கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே வேள்விகள் கோடி செய்தால்-சதுர் வேதங்க ளாயிரமுறை படித்தால், மூளுநற் புண்ணியந்தான்-வந்து மொய்த்திடும்;சிவனியல் விளங்கிநிற்கும்; நாளுநற் செல்வங்கள்-பல நணுகிடும்;சரதமெய் வாழ்வுண்டாம். இக்கதை உரைத்திடுவேன்,-உளம் இன்புறக் கேட்பீர்,முனிவர்களே! நக்க பிரினருளால்-இங்கு நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்! தொக்கன அண்டங்க்ள்-வளர் தொகைபல கோடிபல் கோடிகளாம்! இக்கணக் கெவர றிவார்?-புவி எத்தனை யுளதென்ப தியார றிவார்? நக்க பிரான றிவான்;-மற்று நானறி யேன்பிற நரரறியார்; தொக்க பேரண்டங்கள்-கொண்ட தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற தக்கபல் சாத்திரங்கள்;ஒளி தருகின்ற வானமொர் கடல்போலாம்; அக்கடலதனுக்கே-எங்கும் அக்கரை யிக்கரை யொன்றில்லையாம். இக்கட லதனக்தே-அங்கங் கிடையிடைத் தான்றும்புன் குமிழிகள்போல் தொக்கன உலகங்கள்-திசைத் தூவெளி யதனிடை விரைந்தோடம் மிக்கதொர் வியப்புடைத்தாம்-இந்த வியன்பெரு வையத்தின் காட்சி,கண்டீர் மெய்ககலை முனிவர்களே!-இதன் மெய்ப்பொருள் பரசிவன்சக்தி,கண்டீர்! எல்லை யுண்டோ இலையோ?-இங்கு யாவர் கண்டார்திசை வெளியினக்கே? சொல்லுமொர் வரம்பிட்டால்-அதை * * * * (இது முற்றுப் பெறவில்லை) |