24. சக்தி திருப்புகழ் | |
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்றோது; சக்தி சக்தி சக்தீ என்பார்-சாகார் என்றே நின்றோது; சக்தி சக்தி என்றே வாழ்தல்-சால்பாம் நம்மைச் சார்ந்தீரே! சக்தி சக்தி என்றீ ராகில்-சாகா உண்மை சேர்ந்தீரே! சக்தி சக்தி என்றால் சக்தி-தானே சேரும் கண்டீரே! சக்தி சக்தி என்றால் வெற்றி-தானே சேரும் கண்டீரே! சக்தி சக்தி என்றே செய்தால்-தானே செய்கை நேராகும்; சக்தி சக்தி என்றால் அஃது-தானே முக்தி வேராகும். சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ என்றே ஆடாமோ? சக்தி சக்தி சக்தீ யென்றே-தாளங் கொட்டிப் பாடாமோ? சக்தி சக்தி என்றால் துன்பம்-தானே தீரும் கண்டீரே! சக்தி சக்தி என்றால் இன்பம்-தானே சேரும் கண்டீரே! சக்தி சக்தி என்றால் செல்வம்- தானே ஊறும் கண்டீரோ? சக்தி சக்தி என்றால் கல்வி-தானே தேறும் கண்டீரோ? சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ! சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ! சக்தி சக்தி வாழீ என்றால்-சம்பத் தெல்லாம் நேராகும்; சக்தி சக்தி என்றால் சக்தி-தாசன் என்றே பேராகும். | |
ADVERTISEMENTS
| |
ராகம்-தன்யாசி தாளம்-சதுஸ்ர ஏகம்ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு-கெட்ட சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு; சக்திசக்தி சக்தியென்று சொல்லி-அவள் சந்நிதியி லேதொழுது நில்லு.ஓம்,சக்திமிசை பாடல்பல பாடு-ஓம் சக்திசக்தி என்று தாளம் போடு; சக்திதருஞ் செய்கை நிலந் தனிலே-சிவ சக்திவெறி கொண்டுகளித் தாடு.ஓம்,சக்திதனை யேசரணங் கொள்ளு என்றும் சாவினுக்கொ ரச்சமில்லை தள்ளு, சக்திபுக ழாமமுதை அள்ளு-மது தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளுன.ஓம், சக்திசெய்யும் புதுமைகள் பேசு-நல்ல சக்தியற்ற பேடிகளை ஏசு; சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி-அவள் தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.ஓம், சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை -இதைச் சார்ந்துநிற்ப தேநமக்கோ ருய்கை; சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை-அதில் தண்ணமுத மாரிநித்தம் பெய்கை.ஓம்,சக்திசக்தி சக்தியென்று நாட்டு-சிவ சக்தியருள் பூமிதனில் காட்டு; சக்திபெற்ற நல்லநிலை நிற்பார்-புவிச் சாதிகளெல் லாமதனைக் கேட்டு. ஓம்,சக்திசக்தி சக்தியென்று முழங்கு-அவள் தந்திரமெல் லாமுலகில் வழங்கு; சக்தியருள் கூடிவிடு மாயின்-உயிர் சந்ததமும் வாழும்நல்ல கிழங்கு ஓம்,சக்திசெய்யுந் தொழில்களை எண்ணு நித்தம் சக்தியுள்ள தொழில்பல பண்ணு; சக்திதனை யேயிழந்து விட்டால்-இங்கு சாவினையும் நோவினையும் உண்ணு.ஓம், சக்தியரு ளாலுலகில் ஏறு-ஒரு சங்கடம்வந் தாலிரண்டு கூறு; சக்திசில சோதனைகள் செய்தால்-அவள் தண்ணருளென் றேமனது தேறு.ஓம்,சக்திதுணை என்று நம்பி வாழ்த்து-சிவ சக்திதனையே அகத்தில் ஆழ்த்து; சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய்-சிவ சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து! | |
இன்னுமொரு முறைசொல்வேன்,பேதை நெஞ்சே! எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை; முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை; முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை; மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்! பின்னையொரு கவலையுமிங் கில்லை,நாளும் பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்! நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி, நினைத்தபயன் காண்பதவன் செய்கையன்றோ? மனமார உண்மையினைப் புரட்டலாமோ? மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ? எனையாளும் மாதேவி,வீரார் தேவி, இமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி, மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி, மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே! சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்; சங்கரனென் றுரைத்திடுவோம்,கண்ணன் என்போம்; நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி, நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி, பசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி, உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,. உலகளந்த நாயகிதாள் உரைப்பாய்,நெஞ்சே! செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும். சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்; கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும். கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும், தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும் துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே ந்லலவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும். ‘நமோநமஓம் சக்தி’ யென நவிலாய் நெஞ்சே! பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்; பயனனிறி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே! கேட்டதுநீ பெற்றிடுவாய்,ஐயமில்லை; கேடில்லை,தெய்வமுண்டு,வெற்றி யுண்டு; மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிச சக்தி, வேதத்தின் முடியினிலே விளங்கும் சதி, நாட்டினிலே சனகனைபோல் நமையும் செய்தாள்; ‘நமோநம,ஓம் சக்தி‘ யென நவிலாய் நெஞ்சே! | |
ADVERTISEMENTS
| |
சந்திர னொளியில் அவளைக் கண்டேன், சரண மென்று புகுந்து கொண்டேன்; இந்திரி யங்களை வென்று விட்டேன், எனதென் ஆசையைக் கொன்று விட்டேன். பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள், பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்; துயரி லாதெனைச் செய்து விட்டாள், துன்ப மென்பதைக் கொய்து விட்டாள். மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்; வீசி நிற்கும் வளியைச் செய்தாள்; வான்க ணுள்ள வெளியைச் செய்தாள், வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். | |
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ! ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ) உஜ்ஜய காரண சங்கர தேவீ உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ) வாழி புனைந்து மஹேசுவர தேவன், தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம், (உஜ்ஜயினீ) சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி, திறத்தை நமக்கரு ளிச்செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ) | |
ADVERTISEMENTS
| |
யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்; தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ; பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்; போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய் இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய் பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ? அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்; துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய் |