1. பாரத நாடு | |
9. எங்கள் தாய் | |
முப்பது கோடி முகமுடை யாள்உயிர் மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள் செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள். | |
3 | |
ADVERTISEMENTS
| |
நாவினில் வேத முடையவள் கையில் நலந்திகழ் வாளுடை யாள்-தனை மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை வீட்டிடு தோளுடை யாள். | |
4 | |
அறுபது கோடி தடக்கைக ளாலும் அறங்கள் நடத்துவள் தாய்-தனைச் செறுவது நாடி வருபவ ரைத்துகள் செய்து கிடத்துவள் தாய். | |
5 | |
ADVERTISEMENTS
| |
பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும் புண்ணிய நெஞ்சினள் தாய்-எனில் தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந் துர்க்கை யனையவள் தாய். | |
6 | |
கற்றைச் சடைமதி வைத்த துறவியைக் கைதொழு வாள்எங்கள் தாய்-கையில் ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும் ஒருவனை யுந்தொழு வாள் | |
7 | |
ADVERTISEMENTS
| |
யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும் ஒன்றென நன்றறி வாள்-உயர் போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும் பொற்குவை தானுடை யாள். | |
8 |