1. பாரத நாடு | |
9. எங்கள் தாய் | |
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரி வாள்எங்கள் தாய்-அவர் அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடு வாள். | |
9 | |
ADVERTISEMENTS
| |
வெண்மை வளரிம யாசலன் தந்த விறன்மக ளாம்எங்கள் தாய்-அவள் திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ் சீருறு வாள் எங்கள் தாய். | |
10 | |
ராகம்-ஆபோகி | |
தாளம்-ரூபகம் | |
ADVERTISEMENTS
| |
பேயவள் காண்எங்கள் அன்னை-பெரும் பித்துடை யாள்எங்கள் அன்னை காயழல் ஏந்திய பித்தன்-தனைக் காதலிப் பாள்எங்கள் அன்னை. | |
(பேயவள்) | |
இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து எற்றும் அலைத்திரள் வெள்ளம் தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத் தாவிக் குதிப்பாள்எம் அன்னை. | |
(பேயவள்) | |
ADVERTISEMENTS
| |
தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில் தெய்விக நன்மணம் வீசும் தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத் தேக்கி நடிப்பாள்எம் அன்னை. | |
(பேயவள்) |