1. பாரத நாடு | |
8. பாரத மாதா | |
சித்த மயமிவ் வுலகம் உறுதிநம் சித்தத்தில் ஓங்கிவிட் டால்-துன்பம் அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல் ஆரிய ராணியின் சொல் | |
4 | |
ADVERTISEMENTS
| |
சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத் தட்டி விளை யாடி-நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை. | |
5 | |
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல்லொத்த தோள்எவர் தோள்?-எம்மை ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரிய தேவியின் தோள். | |
6 | |
ADVERTISEMENTS
| |
சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம் தந்த தெவர்கொடைக் கை?-சுவைப் பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும் பாரத ராணியின் கை. | |
7 | |
போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை புகன்ற தெவருடை வாய்?-பகை தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத தேவி மலர்த்திரு வாய். | |
8 | |
ADVERTISEMENTS
| |
தந்தை இனிதுறத் தான்அர சாட்சியும் தையலர் தம் முறவும்-இனி இந்த உலகில் விரும்புகி லேன் என்றது எம்அனை செய்த உள்ளம். | |
9 |