தேசீய கீதங்கள்

1. பாரத நாடு

7.ஜய பாரத!

தேவ ருண்ணும் நன்ம ருந்து
சேர்ந்த கும்பம் என்னவும்
மேவு வார்க டற்க ணுள்ள
வெள்ள நீரை ஒப்பவும்
பாவ நெஞ்சி னோர் நிதம்
பறித்தல் செய்வ ராயினும்
ஓவி லாத செல்வம் இன்னும்
ஓங்கும் அன்னை வாழ்கவே!
4
ADVERTISEMENTS

இதந்த ரும்தொ ழில்கள் செய்து
இரும்பு விக்கு நல்கினள்
பதந்த ரற் குரிய வாய
பன்ம தங்கள் நாட்டினள்
விதம்பெ றும்பல் நாட்டி னர்க்கு
வேறொ ருண்மை தோற் றவே
சுதந்தி ரத்தி லாசை இன்று
தோற்றி னாள்மன் வாழ்கவே!
5
தான தனந்தன தான தனந்தன
தானனத் தானா னே.
ADVERTISEMENTS

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்?-எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்
1

இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடை வில்?-எங்கள்
மந்திரத் தெய்வதம் பாரத ராணி
வயிரவி தன்னுடை வில்.
2
ADVERTISEMENTS

‘ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி’ என்றே-மிக
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன்திருக் கை.
3