1. பாரத நாடு | |
7.ஜய பாரத! | |
தேவ ருண்ணும் நன்ம ருந்து சேர்ந்த கும்பம் என்னவும் மேவு வார்க டற்க ணுள்ள வெள்ள நீரை ஒப்பவும் பாவ நெஞ்சி னோர் நிதம் பறித்தல் செய்வ ராயினும் ஓவி லாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே! | |
4 | |
ADVERTISEMENTS
| |
இதந்த ரும்தொ ழில்கள் செய்து இரும்பு விக்கு நல்கினள் பதந்த ரற் குரிய வாய பன்ம தங்கள் நாட்டினள் விதம்பெ றும்பல் நாட்டி னர்க்கு வேறொ ருண்மை தோற் றவே சுதந்தி ரத்தி லாசை இன்று தோற்றி னாள்மன் வாழ்கவே! | |
5 | |
தான தனந்தன தான தனந்தன தானனத் தானா னே. | |
ADVERTISEMENTS
| |
முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடை வில்?-எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவிநல் ஆரிய ராணியின் வில் | |
1 | |
இந்திர சித்தன் இரண்டு துண்டாக எடுத்தவில் யாருடை வில்?-எங்கள் மந்திரத் தெய்வதம் பாரத ராணி வயிரவி தன்னுடை வில். | |
2 | |
ADVERTISEMENTS
| |
‘ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகின்பக் கேணி’ என்றே-மிக நன்று பல்வேதம் வரைந்தகை பாரத நாயகி தன்திருக் கை. | |
3 |