1. பாரத நாடு | |
5.பாரத தேசம் | |
வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம் வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்; எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். | |
(பாரத) | |
ADVERTISEMENTS
| |
முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே, நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே | |
(பாரத) | |
சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் னாட்டிளம் பெண்களுட னே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத் தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் | |
(பாரத) | |
ADVERTISEMENTS
| |
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்; சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம் | |
(பாரத) | |
காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்; ராசபுத் தானத்து வீரர்தமக் கு நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் | |
(பாரத) | |
ADVERTISEMENTS
| |
பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும் பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்; கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார் காசினி வணிகருக்கு அவைகொடுப் போம். | |
(பாரத) |