1. பாரத நாடு | |
8. பாரத மாதா | |
அன்பு சிவம்உல கத்துயர் யாவையும் அன்பினிற் போகும் என்றே-இங்கு முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன் மொழிஎங்கள் அன்னை மொழி | |
10 | |
ADVERTISEMENTS
| |
மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் மதி-தன் மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது வல்லநம் அன்னை மதி. | |
11 | |
தெய்விகச் சாகுந் தலமெனும் நாடகம் செய்த தெவர் கவிதை?-அயன் செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத தேவி அருட் கவிதை. | |
12 | |
ADVERTISEMENTS
| |
காவடிச் சிந்தில்‘ஆறுமுக வடிவேலனே’ என்ற மெட்டு | |
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம்எங்கள் தாய். | |
1 | |
ADVERTISEMENTS
| |
யாரும் வகுத்தற் கரிய பிராயத்த ளாயினு மேயெங்கள் தாய்-இந்தப் பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப் பயின்றிடு வாள் எங்கள் தாய். | |
2 |