தேசீய கீதங்கள்

1. பாரத நாடு

8. பாரத மாதா

அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே-இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழிஎங்கள் அன்னை மொழி
10
ADVERTISEMENTS

மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி-தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்லநம் அன்னை மதி.
11

தெய்விகச் சாகுந் தலமெனும் நாடகம்
செய்த தெவர் கவிதை?-அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அருட் கவிதை.
12
ADVERTISEMENTS
காவடிச் சிந்தில்‘ஆறுமுக வடிவேலனே’
என்ற மெட்டு

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்.
1
ADVERTISEMENTS

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள் தாய்-இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள் எங்கள் தாய்.
2