1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
அகவல் | |
ADVERTISEMENTS
| |
எனைநீ காப்பாய், யாவுமாந் தெய்வமே! பொறுத்தா ரன்றோ பூமி யாள்வார்? யாவும்நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல் செவ்விய நெறி, அதில் சிவநிலை பெறலாம்; பொங்குதல் போக்கிப் பொறையெனக் கீவாய்; | |
5 | |
மங்கள குணபதி;மணக்குளக் கணபதி! நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்; அகல்விழி உமையாள் ஆசை மகனே! நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும், உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி | |
10 | |
ADVERTISEMENTS
| |
ஆள்வதும்,பேரொளி ஞாயிறே யனைய சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும் நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன் காத்தருள் புரிக, கற்பக விநாயகா! | |
15 | |
கோத்தருள் புரிந்த குறிப்பரும் பொருளே! அஞ்குச பாசமும கொம்பும் தரித்தாய் எங்குல தேவா போற்றி! சங்கரன் மகனே! தாளிணை போற்றி! | |
20 | |
ADVERTISEMENTS
| |
வெண்பா |