1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
வெண்பா | |
ADVERTISEMENTS
| |
நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல் இமைக்பொழுதுஞ் சோராதிருத்தல்-உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்; சிந்தையே! இன்மூன்றும் செய். | |
25 | |
கலித்துறை | |
ADVERTISEMENTS
| |
செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண், வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெலாம் ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே! பையத் தொழில் புரி நெஞ்சே!கணாதிபன் பக்திகொண்டே. | |
26 | |
விருத்தம் | |
ADVERTISEMENTS
| |
பக்தி யுடையார் காரியத்திற் பதறார் மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்குந் தன்மைபோல் பெல்லச் செய்து பயனடைவார் சக்தி தொழிலே அனைத்துமெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்? வித்தைக் கிறவா!கணநாதா! மேன்மைத் தொழிலிற் பணியெனையே. | |
27 |