1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
மேமைப் படுவாய் மனமே! கேள் விண்ணின் இடிமுன் விழுந்தாலும், பான்மை தவறி நடுங்காதே, பயத் தாலேதும் பயனில்லை; யான்முன் னுரைத்தேன் கோடிமுறை, இன்னுங் கோடி மறைசொல்வேன், ஆன்மா வான கணபதியின் அருளுண்டு அச்சம் இல்லையே. | |
23 | |
ADVERTISEMENTS
| |
அகவல் | |
அச்ச மில்லை அமுங்குத லில்லை. நடுங்குத லில்லை நாணுத லில்லை, பாவ மில்லை பதுங்குத லில்லை ஏது நேரினும் இடர்பட மாட்டோம்; அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்; | |
5 | |
ADVERTISEMENTS
| |
கடல்பொங்கி எழுந்தாற் கலங்கமாட்டோம்; யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்; வான முண்டு, மாரி யுண்டு; ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் | |
10 | |
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே; தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும், கேட்கப் பாட்டும், காணநல் லுலகும், களிதுரை செய்யக் கணபதி பெயரும் | |
15 | |
ADVERTISEMENTS
| |
என்றுமிங் குளவாம்; சலித்திடாய்;ஏழை நெஞ்சே!வாழி!நேர்மையுடன் வாழி! வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ! தஞ்ச முண்டு கொன்னேன் செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே. | |
20 |