1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்; கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்; மண்மீ துள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள்,புற்பூண்டு,மரங்கள்; யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே, | |
5 | |
ADVERTISEMENTS
| |
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும், தேவ தேவா! ஞானா காசத்து நடுவே நின்றுநான் ‘பூமண்ட லத்தில் அன்பும் பொறையும் விளங்குக!துன்பமும்,மிடிமையம்,நோவும். | |
10 | |
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிசெலாம் இன்புற்று வாழ்க’என்பேன்!இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி, ‘அங்ஙனே யாகுக’ என்பாய்,ஐயனே! இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை அருள்வாய்;ஆதி மூலமே! அநந்த சக்தி குமாரனே! சந்திர மவுலீ! நித்தியப் பொருளே! சரணம் சரணம் சரணம் சரணமிங் குனக்கே. | |
ADVERTISEMENTS
| |
வெண்பா | |
உனக்கேஎன் ஆவியும் உள்ளமும் தந்தேன்; மனக்கேதம் யாவினைம் மாற்றி-‘எனக்கேநீ, நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து. | |
33 | |
ADVERTISEMENTS
| |
கலித்துறை |