1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
விருத்தம் | |
ADVERTISEMENTS
| |
சுடரே போற்றி! கணத்ததேவர் துரையே போற்றி! எனக்கென்றும் இடரே யின்றிக் காத்திடுவாய், எண்ணாயிரங்கால் முறையிட்டேன்! படர்வான் வெளியிற் பலகோடி கோடி கோடிப் பல்கோடி இடறா தோடும் அண்டங்கள் இசைத்தாய், வாழி இறையவனே! | |
அகவல் | |
ADVERTISEMENTS
| |
இறைவி இறைவன் இரண்டும்ஒன் றாகித் தாயாய்த் தந்தையாய், சக்தியும் சிவனுமாய் உள்ளொளி யாகி உலகெலாந் திகழும் பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ! ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும் | |
5 | |
தேவா தேவா! சிவனே! கண்ணா வேலா! சாத்தா! விநாயகா! மாடா! இருளா! சூரியா! இந்துவே! சக்தியே! வாணீ! காளீ! மாமக ளேயோ! ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது | |
10 | |
ADVERTISEMENTS
| |
யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே! வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே! அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்; நோவு வேண்டேன், நூற் றாண்டு வேண்டினேன், அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; | |
15 |