1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
தானே யாகிய தனிமுதற் கடவுள், யானென தற்றார் ஞானமே தானாய் ுக்தி நிலைக்க மலவித் தாவான், சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள், | |
15 | |
ADVERTISEMENTS
| |
ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை, வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை, வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை முப்பொழு தேத்திப் பணிவது முறையே. | |
20 | |
வெண்பா | |
ADVERTISEMENTS
| |
முறையே நடப்பாய், முழுமூட நெஞ்சே! இறையேனும் வாடாய் இனிமேல்-கறையுண்ட கண்டன் மகன்வேத காரணன் சக்திமகன் தொண்டருக் குண்டு துணை. | |
17 | |
கலித்துறை | |
ADVERTISEMENTS
| |
துணையே! எனதுயிருள்ளே யிருந்து கடர்விடுக்கும் மணியே! எனதுயிர் மன்னவனே! என் றன் வாழ்வினுக்கோர் அணியே! எனுள்ளத்தி லாரமு தே! என தற்புதமே! இணையே துனக்குரைபேன், கடைவானில் எழுஞ்சுடரே! | |
18 |