1. பாரத நாடு | |
6. எங்கள் நாடு | |
மன்னும் இமய மலையெங்கள் மலையே மாநில மீதது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே பார்மிசை யேதொரு நூல்இது போலே? பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே | |
1 | |
ADVERTISEMENTS
| |
மாரத வீரர் மலிந்தநன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கிலை நாடே | |
2 | |
இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழிதொழில் புரியோம் தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம் கன்னலும் தேனும் கனியும்இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும் உன்னத ஆரிய நாடெங்கள் நாடே ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே | |
3 | |
ADVERTISEMENTS
| |
சிறந்து நின்ளற சிந்தை யோடு தேயம் நூறு வென் றிவள் மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் இறந்து மாண்பு தீர மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் அறந்த விர்க்கி லாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே! | |
1 | |
நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேய வாணர்கள் தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் மாறு கொண்டு கல்வி தேய வண்மை தீர்ந்த நாளினும் ஈறு நிற்கும் உண்மை யொன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே! | |
2 | |
ADVERTISEMENTS
| |
வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே வெல்லு ஞானம் விஞ்சி யோர்செய் மெய்மை நூல்கள் தேயவும் சொல்லும் இவ் வனைத்தும் வேறு சூழ நன்மை யுந்தர வல்ல நூல்கெ டாது காப்பள் வாழி அன்னை வாழியே! | |
3 |