6. பிறநாடுகள் | |
53.கரும்புத் தோட்டத்திலே ஹரிகாம்போதி ஜன்யம் | |
பல்லவி | |
ADVERTISEMENTS
| |
கரும்புத் தோட்டத்திலே-ஆ! கரும்புத் தோட்டத்திலே | |
சரணங்கள் | |
ADVERTISEMENTS
| |
கரும்புத் தோட்டத்திலே-அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்து கின்றனரே!-ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய் சுருங்கு கின்றனரே!-அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ?ஒரு மருந்திதற் கிலையோ!-செக்கு மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் | |
(கரும்புத் தோட்டத்திலே) 1 | |
பெண்ணென்று சொல்லிடிலோ-ஒரு பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே!நினது எண்ணம் இரங்காதோ?-அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர்வெறும் மண்ணிற் கலந்திடுமோ?-தெற்கு மாகட லுக்கு நடுவினிலே,அங்கோர் கண்ணற்ற தீவினிலே-தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார்-அந்தக் | |
(கரும்புத் தோட்டத்திலே)2 | |
ADVERTISEMENTS
| |
நாட்டை நினைப்பாரோ?-எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ?-அவர் விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல் கேட்டிருப்பாய் காற்றே!-துன்பக் கேணியிலே எங்கள் பெண்க ளழுதசொல் மீட்டும் உரையாயோ?-அவர் விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர் | |
(கரும்புத் தோட்டத்திலே) 3 |