1. பாரத நாடு | |
4. பாரத நாடு | |
தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில் ஈரத்தி லேஉப காரத்திலே சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு தருவதி லேஉயர் நாடு- இந்தப் | |
(பாருக்குள்ளே) | |
ADVERTISEMENTS
| |
நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப் பன்மை யிலேமறத் தன்மையிலே பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின் புகழினி லேஉயர் நாடு-இந்தப் | |
(பாருக்குள்ளே) | |
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினி லேஉயர் நாடு-இந்தக் | |
(பாருக்குள்ளே) | |
ADVERTISEMENTS
| |
வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத் தண்மையி லேமதி நுண்மையிலே உண்மையி லேதவ றாத புலவர் உணர்வின லேஉயர் நாடு-இந்தப் | |
(பாருக்குள்ளே) | |
யாகத்தி லேதவ வேகத்திலே-தனி யோகத்தி லேபல போகத்திலே ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம் அருளினி லேஉயர் நாடு-இந்தப் | |
(பாருக்குள்ளே) | |
ADVERTISEMENTS
| |
ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல் காற்றினி லேமலைப் பேற்றினிலே ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் | |
(பாருக்குள்ளே) |