3.சுதந்திரம் | |
31. சுதந்திரப் பள்ளு பள்ளர் களியாட்டம் | |
ராகம்-வராளி | |
தாளம்-ஆதி | |
ADVERTISEMENTS
| |
பல்லவி | |
ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று | |
(ஆடுவோமே) | |
ADVERTISEMENTS
| |
சரணங்கள் | |
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே | |
(ஆடுவோமே) | |
ADVERTISEMENTS
| |
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு; சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே | |
(ஆடுவோமே) |