தேசீய கீதங்கள்

1. பாரத நாடு

3. வந்தே மாதரம் நாட்டு வணக்கம்

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே- எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே- அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ?
2
ADVERTISEMENTS

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே-அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே-மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ?
ராகம்-ஹிந்துஸ்தானி தோடி

பல்லவி
ADVERTISEMENTS
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு
சரணங்கள்
ADVERTISEMENTS
ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு-இந்தப்
(பாருக்குள்ளே)