1. பாரத நாடு | |
3. வந்தே மாதரம் நாட்டு வணக்கம் | |
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள் ஈந்ததும் இந்நாடே- எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே- அவர் கன்னிய ராகி நிலவினி லாடிக் களித்ததும் இந்நாடே-தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல் போந்ததும் இந்நாடே-இதை 'வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்று வணங்கேனோ? | |
2 | |
ADVERTISEMENTS
| |
மங்கைய ராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே-அவர் தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித் தழுவிய திந்நாடே-மக்கள் துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர் அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே-இதை 'வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்று வணங்கேனோ? | |
ராகம்-ஹிந்துஸ்தானி தோடி பல்லவி | |
ADVERTISEMENTS
| |
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு | |
சரணங்கள் | |
ADVERTISEMENTS
| |
ஞானத்தி லேபர மோனத்திலே-உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேஉயர் நாடு-இந்தப் | |
(பாருக்குள்ளே) |