1. பாரத நாடு | |
2. வந்தே மாதரம் | |
ஜயஜய பாரத ஜயஜய பாரத ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய | |
(வந்தே) | |
ADVERTISEMENTS
| |
ஆரிய பூமியில் நாரிய ரும் நர சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் | |
(வந்தே) | |
நொந்தே போயினும் வெந்தே மாயினும் நந்தே சத்தர்உ வந்தே சொல்வது | |
(வந்தே) | |
ADVERTISEMENTS
| |
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர் சென்றா யினும்வலி குன்றா தோதுவம் | |
(வந்தே) | |
ராகம்-காம்போதி | |
தாளம்-ஆதி | |
ADVERTISEMENTS
| |
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே-அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே-இதை வந்தனை கூறி மனதில் இருத்தி, என் வாயுற வாழ்த்தேனோ-இதை 'வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்று வணங்கேனோ? | |
1 |