தேசீய கீதங்கள்

1. பாரத நாடு

1. வந்தே மாதரம் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
(வந்தே)
ADVERTISEMENTS

எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
(வந்தே)

புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
(வந்தே)
ADVERTISEMENTS
ராகம்- ஹிந்துஸ்தானி பியாக்

பல்லவி
தாளம்-ஆதி
வந்தே-மாதரம்-ஜய
வந்தே மாதரம்
(வந்தே)
ADVERTISEMENTS
சரணங்கள்