2. பாஞ்சாலி சபதம் | |
(இரண்டாம் பாகம்) அடிமைச் சருக்கம் 45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல் | |
வேறு எப்பொழு தும்பிர மத்திலே சிந்தை ஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த் தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்-வகை தானுணர்ந் தான்சஹ தேவானம்-எங்கம் ஒப்பில் புலவனை ஆட்டத்தில்-வைத்தல் உன்னித் தருமன் பணயமென்று -அங்குச் செப்பினன் காயை உருட்டினார்-அங்குத் தீய சகுனி கெலித்திட்டான். | |
ADVERTISEMENTS
| |
நகுலனை வைத்தும் இழந்திட்டான்;-அங்கு நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி-வந்து புகுவது போலவன் புந்தியில்‘என்ன புன்மை செய்தோம்?’என எண்ணினான்-அவ்வெண்ணம் மிகுவதன் முன்பு சகுனியும்-ஐய! வேறோரு தாயிற் பிறந்தவர்-வைக்கத் தகுவ ரென்றிந்தச் சிறுவரை-வைத்துத் தாயத்தி லேஇழந் திட்டனை’. ‘திண்ணிய வீமனும் பார்த்தனும்-குந்தி தேவியின் மக்களுனை யொத்தே-நின்னிற் கண்ணியம் மிக்கவர் என்றவர்-தமைக் காட்டுதற் கஞ்சினை போலும் நீ?”-என்று புண்ணியமை மிக்க தருமனை-அந்தப் புல்லன் வினவிய போதினில்,-தர்மன் துண்ணென வெஞ்சின மெய்தியே,-அட! சூதில் அரசிழந் தேகினும். | |
‘எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்;ஐவர் எண்ணத்தில்,ஆவியில் ஒன்றுகாண்,-இவர் பங்கமுற் றேபிரி வெய்துவார்-என்று பாதகச் சிந்தனை கொள்கிறாய்;-அட! சிங்க மறவர் தமக்குள்ளே-வில்லுத் தேர்ச்சியி லேநிக ரற்றவன்,-எண்ணில் இங்குப் புவித்தலம் ஏழையும்-விலை யீடெனக் கொள்ளத் தகாதவன். ‘கண்ணனுக் காருயிர்த் தோழனாம்-எங்கள் கண்ணிலுஞ் சால இனியவன், வண்ணமும் திண்மையும் சோதியும்-பெற்று வானத் தமரரைப் போன்றவன்-அவன் எண்ணரு நற்குணஞ் சான்றவன்,-புக ழேறும் விஜயன் பணயங் காண்!-பொய்யில் பண்ணிய காயை உருட்டுவாய்’-என்று பார்த்திவன் விம்மி உரைத்திட்டான். மாயத்தை யேஉரு வாக்கிய-அந்த மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே கெட்ட தாயத்தைக் கையினில் பற்றினான்;-கையில் தாய முரடடி விழுத்தினான்;-அவன் சாற்றிய தேவந்து வீழ்ந்ததால்,-வெறும் ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார்-மன்னர் இப்புவி மீதுள ராமன்றோ? | |
ADVERTISEMENTS
| |
‘கொக்கரித் தார்த்து முழுங்கியே-களி கூடிச் சகுனியுஞ் சொல்லுவான்,-‘எட்டுத் திக்கனைத்தும் வென்ற பார்த்தனை-வென்று தீர்த்தனம் வீமனைக் கூ’றென்றான்.தர்மன் தக்கது செய்தல் மறந்தனன்,-உளஞ் சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில்-எங்கும் அக்கரை இக்கரை காண்கிலன்,-அறத் தண்ணல் இதனை உரைக்கின்றான்; ‘ஐவர் தமக்கொர் தலைவனை-எங்கள் ஆட்சிக்கு வேர்வலி அஃதினை,-ஒரு தெய்வம்முன் னேநின் றெதிர்ப்பினும்-நின்று சீறி அடிக்குந் திறலனை-நெடுங் கைவளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும்புகழ் வீமனை-உங்கள் பொய்வளர் சூதினில் வைத்திட்டேன்-வென்று போ’என் றுரைத்தனன் பொங்கியே. போரினில் யானை விழக்கண்ட பல பூதங்கள் நாய்நரி காகங்கள்-புலை ஓரி கழுகென் றிவையெலாம்-தம துள்ளங் களிகொண்டு விம்மல்போல்,-மிகச் சீரிய வீமனைச் சூதினில் அந்தத் தீயர் விழுந்திடக் காணலும்-நின்று மார்பிலுந் தோளிலுங் கொட்டினார்-களி மண்டிக் குதித்தெழுந் தாடுவார். | |
மன்னவர்,தம்மை மறந்துபோய்,-வெறி வாய்ந்த திருடரை யொத்தனர்,-அங்குச் சின்னச் சனுனி சிரிப்புடன்-இன்னும் செப்புக பந்தயம் வே’ றென்றான்-இவன் தன்னை மறந்தவ னாதலால்-தன்னைத் தான்பண யமென வைத்தனன்,-பின்பு முன்னைக் கதையன்றி வேறுண்டோ?-அந்த மோசக் சகுனி கெவிலத்தனன். | |
ADVERTISEMENTS
| |
பொங்கி யெழுந்து சுயோதனன்-அங்கு பூதல மன்னர்க்குச் சொல்லுவான்;-ஒளி மங்கி யழிந்தனர் பாண்டவர்;-புவி மண்டலம் நம்ம தினிக்கண்டீர்,-இவ் சங்கை யிலாத நிதியெல்லாம்-நம்மைச் சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள்!-இதை எங்கும் பறையறை வாயடா-தம்பி!’ என்றது கேட்டுச் சகுனி தான். |