1. கண்ணன் பாட்டு | |
20. கண்ணம்மா-என் காதலி | |
குறிப்பிடம் தவறியது செஞ்சுருட்டி-ஆதிதாளம்சிருங்கார ரசம் தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே, பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா! மார்பு துடிக்கு தடீ! பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே பாவை தெரியு தடி! மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே வேதனை செய்கு தடீ! வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்! மோனத் திருக்குதடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே, நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர் நரகத் துழலுவதோ? கடுமை யுடைய தடீ!எந்த நேரமும் காவலுன் மாளிகையில்; அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான் அங்கு வருதற் கில்லை; கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே; நடுமை யரசி யவள்-எதற் காகவோ நாணிக் குலைந்திடுவாள். கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை ஆயிரங் கோடி முறை நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம் பண்ணிய தில்லை யடி! | |
ADVERTISEMENTS
| |
யோகம்பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு, தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு. வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா! வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு; காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா! வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு; பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு; ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம், ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா! வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு; பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு; எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா! வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு; பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு; நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்? ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா! காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு; வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு; போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே! நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு; செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு; எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே! முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா! தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு; வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு; தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா! | |
புன்னாகவராளி-திஸ்ர ஏகதாளம் ரசகங்கள் : அற்புதம்,கருணைதஞ்ச முலகினில் எங்கணு மின்றித் தவித்துத் தடுமாறி பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன், பார முனக் காண்டே! ஆண்டே!-பாரமுனக் காண்டே! துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச் சுகமருளல் வேண்டும்; அன்புடன் நின்புகழ் பாடிக்குறித்து நின் ஆணை வழி நடப்பேன்; ஆண்டே-ஆணைவழி நடப்பேன். சேரிமுழுதும் பறையடித் தேயருட் சீர்த்திகள் பாடிடுவேன்? பேரிகை கொட்டித் திசைக ளதிர நின் பெயர் முழுக்கிடுவேன்; ஆண்டே!-பெயர் முழக்கிடுவேன். பண்ணைப் பறையர்தங் கூட்டத்தி லேயிவன் பாக்கிய மோங்கி விட்டான்; கண்ணனடிமை யிவனெனுங் கீர்த்தியில் காதலுற் றங்கு வந்தேன்; ஆண்டே! காதலுற் றிங்கு வந்தேன்; காடு கழனிகள் காத்திடுவன்,நின்றன் காலிகள் மேய்த்திடுவேன்; பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென் பக்குவஞ் சொல்லாண்டே! ஆண்டே!-பக்குவஞ் சொல்லாண்டே! தோட்டங்கள் மொத்திச் செடி வளர்க்கச் சொல்லிச் சோதனை போடாண்டே! காட்டு மழைழக்குறி தப்பிச் சொன்னா லெனைக் கட்டியடி யாண்டே! ஆண்டே!-கட்டியடி யாண்டே! பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப் பிழைத்திட வேண்டுமையே! அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள் ஆகிட வேண்டுமையே? உபகாரங்கள்-ஆகிட வேண்டுமையே! மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி வாங்கித் தரவேணும்; தானத்துகுச் சில வேட்டிகள் வாங்கித் தரவுங் கடனாண்டே! சில வேட்டி-தரவுங் கடனாண்டே! ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி யொரு சில பேய்கள் வந்தே துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து தொலைத்திட வேண்டுமையே! பகையாவுந் -தொலைத்திட வேண்டுமையே! பேயும் பிசாசுந் திருடரு மென்றன் பெயரினைக் கேட்டளவில், வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க வழி செய்ய வேண்டுமையே! தொல்லைதீரும்-வழிசெய்ய வேண்டுமையே! | |
ADVERTISEMENTS
| |
ராகம்-புன்னாக வராளிபல்லவி நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா! நின்னைச் சரணடைந்தேன்!சரணங்கள் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்) மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில் குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று (நின்) தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்) துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை, அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்) நல்லதுதீயது நாமறியோம் அன்னை நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்) | |
ADVERTISEMENTS
|