1. கண்ணன் பாட்டு | |
14. கண்ணன்-என் காதலன் | |
பிரிவாற்றாமைராகம்-பிலஹரி ஆசை முகமறந்து போச்சே-இதை ஆரிடம் சொல்வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில் நினைவு முகமறக்க லாமோ? கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில் கண்ண னழழுமுழு தில்லை; நண்ணு முகவடிவு காணில்-அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம் ஓய்வு மொழிதலுமில்லாமல்-அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம் வாயு முரைப்பதுண்டு கண்டாய்-அந்த மாயன் புகழினையெய் போதும். கண்ணன் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு; பெண்க ளினத்திலிது போல-ஒரு பேதையை முன்புகண்ட துண்டோ? தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும்-இந்த வைய முழுதுமில்லை தோழி! கண்ணன் முகமறந்து போனால்-இந்தக் கண்க ளிருந்துபய னுண்டோ? வண்ணப் படமுமில்லை கண்டாய்-இனி வாழும் வழியென்னடி தோழி? | |
ADVERTISEMENTS
| |
வராளி-திஸ்ர ஏக தாளம்சிருங்கார ரசம் கனிகள் கொண்டுதரும்-கண்ணன் கற்கண்டு போலினிதாய்; பனிசெய் சந்தனமும்-பின்னும் பல்வகை அத்தர்களும், குனியும் வாண்முகத்தான்-கண்ணன் குலவி நெற்றியிலே இனிய பொட்டிடவே-வண்ணம் இயன்ற சவ்வாதும். கொண்டை முடிப்பதற்கே-மணங் கூடு தயிலங்களும், வண்டு விழியினுக்கே-கண்ணன் மையுங் கொண்டுதரும்; தண்டைப் பதங்களுக்கே-செம்மை சார்த்துசெம் பஞ்சுதரும்; பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன் பேசருந் தெய்வமடி! குங்குமங் கொண்டுவரும்-கண்ணன் குழைத்து மார்பெழுத; சங்கையி லாதபணம்-தந்தே தழுவி மையல் செய்யும்; பங்கமொன் றில்லாமல்-முகம் பார்த்திருந் தாற்போதும்; மங்கள மாகுமடீ!-பின்னோர் வருத்த மில்லையடீ! | |
காட்சி வியப்புசெஞ்சுருட்டி-ஏகதாளம் ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம் சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா! சூரிய சந்திர ரோ? வட்டக் கரிய விழி,-கண்ணம்மா! வானக் கருமை கொல்லோ? பட்டுக் கருநீலப்-புடவை பதித்த நல் வயிரம் நட்ட நடு நிசியில்-தெரியும் நக்ஷத் திரங்க ளடி! சோலை மல ரொளியோ-உனது சுந்தரப் புன்னகை தான்? நீலக் கட லலையே-உனது நெஞ்சி லலைக ளடி! கோலக் குயி லோசை-உனது குரலி னிமை யடீ! வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா! மருவக் காதல் கொண்டேன். சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா! சாத்திர மேதுக் கடீ! ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா! சாத்திர முண்டோ டீ! மூத்தவர் சம்ம தியில்-வதுவை முறைகள் பின்பு செய்வோம்; காத்திருப் பேனோ டீ?-இது பார். கன்னத்து முத்த மொன்று! | |
ADVERTISEMENTS
| |
பின்னே வந்து நின்று கண் மறைத்தல் நாதநாமக்கிரியை-ஆதிதாளம்சிருங்கார ரசம் மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்; மூலைக் கடலினையவ் வான வளையம் முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்; நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே சாலப் பலபலநற் பகற் கனவில் தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே, ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே, பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன், பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்; ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்; ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்; ‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா! மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன். சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே. திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்; “நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்? திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்? பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே. பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள். “நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்; பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை; சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே, திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.” | |
முகத்திரை களைதல்நாதநாமக்கிரியை -ஆதி தாளம்சிருங்கார ரசம் தில்லித் துருக்கர் செய்த வழக்கமடீ!-பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்; வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்; வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி மறைத்தத னாலழகு மறைந்த தில்லை; சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச் சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்-பண்டை ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ஓரிரு முறைகண்டு பழகிய பின்-வெறும் ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ? யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்-வலு வாக முகத்திரையை அகற்றி விட்டால்? காரிய மில்லையடி வீண்ப சப்பிலே -கனி கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ? | |
ADVERTISEMENTS
| |
நாணிக் கண் புதைத்தல் நாதநாமக்கிரியை-ஆதிதாளம்சிருங்கார ரசம் மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை-இவன் மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ? சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ?-இங்கு செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ? வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன்-நின்றன் மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன். என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எநனக் கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! கன்னி வயதிலுனைக் கண்ட தில்லையோ?-கன்னங் கன்றிச் சிவக்க முத்த மிட்ட தில்லையோ! அன்னிய மாகநம்மள் எண்ணுவ தில்லை-இரண் டாவுயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ? பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? துகில் பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ என்னைப் புறமெனவுங் கருதுவதோ-கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்-சுவை நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ? பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்-தம்முள் பன்னி உபசரணை பேசுவ துண்டோ? நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே-விண்ணை நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ? மூட்டும் விறகினையச் சோதி கவ்வுங்கால்-அவை முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்;-அவர் சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்; நேற்று முன்னாளில் வந்த உறவன் றடீ!-மிக நெடும்பண்டைக் காலமுதல் சேர்ந்து வந்ததாம். போற்றுமி ராமனென முன்புதித்தனை,-அங்கு பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்; ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்-கண்ணன் உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான். முன்னை மிகப்பழமை இரணியனாம்-எந்தை மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ; பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன்-ஒளிப் பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன். சொன்னவர் சாத்திரத்தில மிகவல்லர் காண்;-அவர் சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை; இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில் ஏதுக்கு நாண முற்றுக் கண்புதைப்பதே? |