87. அறிவே தெய்வம் | |
கண்ணிகள் | |
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளீரோ?மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள்!-எத னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதி யறியீரோ? சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ?-பல பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ? வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்று வேதம் புகன்றிடுமே-ஆங்கோர் வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ் வேத மறியாதே. நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று நான்மறை கூறிடுமே-ஆங்கோர் நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந் நான்மறை கண்டிலதே. போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணு நிலையாமே-உப சாந்த நிலையேவேதாந்த நிலையென்று சான்றவர் கண்டனரே. கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று காட்டும் மறைகளெல்லாம்-நீவிர் அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு அவங்கள் புரிவீரோ? உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு, கொள்ளற் கரிய பிரமமென் றேமறை கூவுதல் கேளீரோ? மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து வெறுங் கதைகள் சேர்த்துப்-பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை காட்டவும் வல்லீரோ? ஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனும் வேதமெலாம்-என்றும் ஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனக் கொள்வாயே. | |
ADVERTISEMENTS
| |
உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும். வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப் பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய் இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய். வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக் கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய். தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற் சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த் தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே. எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக் கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே. காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய் மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே. எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே. மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்; பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே. இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார் எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே. வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற் றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே. ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்; என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே. வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா! யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா! எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத் தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா! எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென் றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா! காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா; பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே. சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா! சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா! சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம், வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா! நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள் சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா! | |
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ? வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். | |
ADVERTISEMENTS
| |
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான் விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான், வாரியினுள் உயிரெலாம் நான், கம்பனிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உரவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில்நகர் கோபுரம் யாவுமே நான், இன்னிசை மாதரிசையுளேன் நான், இன்பத்திரள்கள் அனைத்துமே நான்; புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான், பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். மந்திரங்கோடி இயக்குவோன் நான், இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்; தந்திரங் கோடி சமைத்துளோன் நான். சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான், அவை பிழையாமே சுழற்றுவோன் நான், கண்டல் சக்திக் கணமெலாம் நான் காரணமாகிக் கதித்துளோன் நான். நானெனும் பொய்யை நடத்துவோன் நான், ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்; ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்குமுதற்சோதி நான். | |
ராகம்-பிலஹரிபல்லவி பக்தியினாலே-தெய்வ-பக்தியினாலேசரணங்கள் பக்தியினாலே-இந்தப் பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி! சித்தந் தெளியும்,-இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல வீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத் தத்துவ முண்டாம்,-நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும். (பக்தியினாலே) காமப் பிசாசைக் -குதிக் கால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத் தாமசப் பேயைக்-கண்டு தாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும் தீமையை எண்ணி-அஞ்சுந் தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து பொய்ந் நாம மில்லாத-உண்மை நாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும், (பக்தியினாலே) ஆசையைக் கொல்வோம்,-புலை அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்டட பாச மறுப்போம்,-இங்கு பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசஞ் செய்யாமல்-உண்மை முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர் ஈசனைப் போற்றி-இன்பம் யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம், (பக்தியினாலே) சோர்வுகள் போகும்,-பொய்ச் சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற் பார்வைகள் தோன்றும்,-மிடிப் பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல சேர்வைகள் சேரும்,-பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும் தீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும், (பக்தியினாலே) கல்வி வளரும்,-பல காரியுங் கையுறும்,வீரிய மோங்கிடும், அல்ல லொழியும்-நல்ல ஆண்மை யுண்டாகும்,அறிவு தெளிந்திடும், சொல்லுவதெல்லாம்-மறைச் சொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய் வல்லமை தோன்றும்,-தெய்வ வாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தியினாலே) சோம்ப லழியும்-உடல் சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங் கூம்புத லின்றி-நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும் வீம்புகள் போகும்-நல்ல மேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப் பாம்பு மடியும்-மெய்ப் பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும். (பக்தியினாலே) சந்ததி வாழும்,-வெறுஞ் சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும் இந்தப் புவிக்கே-இங்கொர் ஈசனுண்டாயின் அறிக்கையிட் டேனுன்தன் கந்த மலர்த்தாள்-துணை; காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என் சிந்தை யறிந்தே-அருள் செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும் (பக்தியினாலே) | |
ADVERTISEMENTS
| |
“பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல மனந்திறப்பது மதியாலே” பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே. ஏட்டைத் துடைப்பது கையாலே மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே, வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே. காற்றை யடைப்பது மனதாலே-இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே, சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர் துணி வுறுவது தாயோலே. (பூட்டைத்) |